பாகிஸ்தான் ஆதரவாளர்கள்.. 3 முஸ்லிம்களை கொன்ற RPF வீரர் பேச்சு! மோடி, யோகிக்கு வாக்களிக்க மிரட்டல்
மும்பை: ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர் தனது உயரதிகாரி மற்றும் 3 முஸ்லிம் பயணிகளை சுட்டுக்கொன்றவுடன், இந்தியாவில் நீங்கள் வாழ வேண்டும் என்றால் மோடிக்கும் யோகிக்கும் வாக்களிக்க வேண்டும் என மற்ற ரயில் பயணிகளிடம் மிரட்டிய பகீர் வீடியோ வெளியாகியுள்ளது.
நேற்று காலை ஜெய்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்றுகொண்டு இருந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரரான சேத்தன் சிங், ரயில்வே பாதுகாப்பு படையில் தனது உயரதிகாரியான எஸ்.ஐ.டீக்காராம் மீனாவையையும், 3 ரயில் பயணிகளையும் சரமாரியாக சுட்டுக் கொலை செய்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை ரயில் நிலையம் வந்தடைவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக வைதர்னா என்ற ரயில் நிலையத்தை தாண்டி பால்கர் என்ற பகுதிக்கு அருகே இந்த துப்பாக்கிச் சூட்டை அவர் நிகழ்த்தியுள்ளார். அதிகாலை 5 மணிக்கு நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது.
ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ. டீக்காராம் மீனாவை சுட்டுக் கொன்றபின் பி5 என்ற பெட்டியில் உள்ள ஒரு பயணியை சுட்டுக் கொலை செய்துள்ளார் சேட்டன் சிங். அதே வெறியுடன் பி6 என்ற பெட்டிக்கு சென்று அங்குள்ள ஒருவரையும் அவர் கொடூரமாக கொன்று உள்ளார். அதன் பின்னர் பி5 மற்றும் பி6 பெட்டிகளுக்கு இடையே இருக்கும் பேண்ட்ரி காரில் உள்ள ஒருவரையும் சேட்டன் சிங் சுட்டுக்கொலை செய்து உள்ளார்.
சேட்டன் சிங்கால் கொல்லப்பட்ட மேலும் 3 பயணிகளும் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். காதிர்பார் முஹம்மது ஹுசைன் பன்புர்வாலா (48), அக்தர் அப்பாஸ் அலி (48), சதார் முஹம்மது ஹுசைன் ஆகிய 3 ரயில் பயணிகள் ரயில்வே பாதுகாப்பு படை வீரரால் கொல்லப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அதன் பின்னர் தஹிசார் என்ற பகுதி அருகே ரயிலில் உள்ள அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தி சேத்தன் சிங் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்று உள்ளார். அப்போது அவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்து உள்ளார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸை சேர்ந்த சேத்தன் சிங்குடன் மேலும் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சேத்தன் சிங் ஒருவரை ரயிலில் சுட்டுக் கொலை செய்த பின்னர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரத்த வெல்லத்தில் கொல்லப்பட்ட பயணி கீழே விழுந்து கிடந்த நிலையில், சேத்தன் சிங் துப்பாக்கியை காட்டி அங்கிருந்த மற்ற பயணிகளை மிரட்டுகிறார்.
"பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்களைதான் நான் கொலை செய்தேன். இந்தியாவில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மோடிக்கும் யோகிக்கும் வாக்களிக்க வேண்டும்." என்று அந்த சேட்டன் சிங் பேசுகிறார். இதனை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ நரேஷ் பல்யான் ட்விட்டரில் பகிர்ந்து, "ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கூட இதுபோன்ற அக்கிரமம் நடக்கவில்லை. அரசு அதிகாரிகள் மத்தியில் பாஜக அரசு விஷத்தை பரப்பி உள்ளது." என்று விமர்சித்துள்ளார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications