‛அவ்வளவு தொகுதிலாம் தரமுடியாது’.. உத்தவ் தாக்கரேவிடம் மோதும் காங்கிரஸ்! ‛இந்தியா’ கூட்டணியில் ஷாக்
மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் ‛இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் மகராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி கேட்ட தொகுதிகளை கொடுக்க காங்கிரஸ் மறுத்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ‛இந்தியா' கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மகராஷ்டிராவில் நீண்டகாலமாக பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சி இருந்தது. ஆனால் கடந்த 2019 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகி சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாராஷ்டிரா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.

உத்தவ் தாக்கரே முதல்வரானார். இரண்டரை ஆண்டு ஆட்சி முடிந்த நிலையில் கடந்த ஆண்டு கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் அணி பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.
இதையடுத்து சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றது. இந்நிலையில் தான் பாஜகவுக்கு பாடம் புகட்ட ‛இந்தியா' கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி இணைந்தது. மகராஷ்டிராவை பொறுத்தமட்டில் ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி இடையே நல்ல நட்பு உள்ளது. இதனால் அங்கு நாடாளுமன்ற தொகுதி பங்கீடு என்பது பிரச்சனையின்றி முடியும் என கூறப்பட்டது.
அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தலா 16 தொகுதிகளில் களமிறங்கும் என்ற தகவல்கள் வெளியாகின. கடந்த வாரம் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஏஐசிசி பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் தான் தற்போது ‛இந்தியா' கூட்டணி சார்பில் மகராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே ஆகியோர் சார்பில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது உத்தவ் தாக்கரே தரப்பில் மகராஷ்டிராவில் 23 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அவ்வளவு தொகுதிகளை எல்லாம் ஒதுக்கீடு செய்ய முடியாது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சிவசேனா தற்போது 2 பிரிவாக பிரிந்துள்ள நிலையில் இவ்வளவு தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதுபற்றி மகராஷ்டிரா முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான் கூறுகையில், ‛‛ஒவ்வொரு கட்சியும் அதிக இடங்களைப் பெற விரும்பினாலும் கூட தற்போதைய சூழ்நிலையில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவின் 23 இடங்களுக்கான கோரிக்கை அதிகமாக உள்ளது.
சிவசேனா 23 இடங்களை போட்டியிட வழங்கும்படி கோரலாம், ஆனால் அவர்கள் அந்த தொகுதிகளில் என்ன செய்வார்கள்?.. சிவசேனா தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். நெருக்கடி நிலையில் உத்தவ் தாக்கரே உள்ளார்'' என்றார். இதனால் மகராஷ்டிராவில் ‛இந்தியா' கூட்டணியில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications