இந்தியா திராவிடர்கள், ஆதிவாசிகளுக்கு சொந்தமானது.. மோடி, ஷாக்களுடையது அல்ல -மும்பையில் முழங்கிய ஒவைசி
மும்பை: இந்தியா யாருக்காவது சொந்தம் என்றால் அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும்தான் என ஐதராபாத் எம்.பி.அசதுத்தீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், ஐதராபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அசதுத்தீன் ஒவைசி கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்தியா திராவிடர்களுக்கு சொந்தமானது
அப்போது பேசிய அவர், "பாஜக, ஆர்.எஸ்.எஸ். எல்லாம் முகலாயர்களுக்கு பின்னர் வந்தவை. இந்தியா என்பது எனக்கோ, தாக்கரேக்களுக்கோ, மோடிக்களுக்கோ, ஷாக்களுக்கோ சொந்தமானது அல்ல. இந்தியா யாருக்காவது சொந்தம் என்றால் அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும்தான். ஆப்பிரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் இடம்பெயந்த பிறகுதான் இந்தியா என்ற நாடே உருவானது." என்றார்.

சரத் பவாரிடம் கேள்வி
இந்த உரையின்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நோக்கி கேள்வி எழுப்பிய அசதுத்தீன் ஒவைசி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய சரத் பவார், தனது கட்சியை சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்காதது ஏன்? பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகியவை தங்களை மதசார்பற்ற கட்சிகள் என்று சொல்கின்றன.

மதசார்பற்ற கட்சிகள்
இந்த கட்சிகளை சேர்ந்த யாரும் சிறைக்கு செல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் தங்கள் கட்சியை சேர்ந்த இஸ்லாமியர் சிறைக்கு சென்றால் அவர்களுக்கு பிரச்சனையில்லை. சஞ்சய் ராவத் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். நான் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். சஞ்சய் ராவத்துக்காக பிரதமர் மோடியை சந்தித்த சரத் பவார் ஏன் நவாப் மாலிக்கிற்காக பிரதமரை சந்திக்கவில்லை. எந்த வகையில் சஞ்சய் ராவத்தைவிட நவாப் மாலிக்கை குறைந்துவிட்டார்.

இஸ்லாமியர் என்பதுதான் காரணமா?
நவாப் மாலிக் இஸ்லாமியர் என்ற காரணத்தால் அவருக்காக சரத் பவார் பேசவில்லையா? அல்லது இருவரும் சமம் கிடையாதா? பிவாண்டியில் நமது கட்சியை சேர்ந்த காலித் குட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அரசுக்கும் ஊழலுக்கும் எதிராக இருந்ததால் காலித் குட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவர் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் தவறானவை. காலித் குட்டுவை விடுவிக்க வேண்டும் என சிவ சேனா கட்சி மற்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் கேட்டுக்கொள்கிறேன். " என்றார்.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications