இது என்ன புதுஸ்ஸா.. ஷீனா போரா உயிரோடுதான் இருக்கிறாராம்.. இந்திராணி முகர்ஜி பரபரப்பு கடிதம்
மும்பை: கொல்லப்பட்டதாக சொல்லப்படும் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக சிபிஐ இயக்குநருக்கு சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவி இந்திராணி முகர்ஜி. பீட்டர் முகர்ஜி இந்திராணியின் இரண்டாவது கணவர். இந்த விவகாரம் இந்திராணியின் மகள் (முதல் கணவருக்கு பிறந்தவர்) ஷீனா போராவிற்கு ஒரு புகைப்படத்தில் தனது தாயுடன் இருந்த போதுதான் தெரியவந்தது.
இதையடுத்து பீட்டரிடம் ஷீனாவை தனது தங்கை என்றே இந்திராணி அறிமுகம் செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் ஷீனா போராவை கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திராணி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

துப்பாக்கியுடன் டிரைவர்
இந்த சம்பவம் இந்திராணி முகர்ஜியின் டிரைவர் ஷியாம்வர் ராய் துப்பாக்கியுடன் பிடிபட்ட போது அவர் ஷீனா போராவின் கழுத்தை நெரித்து இந்திராணி கொலை செய்ததை அவர் பார்த்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்திராணி முகர்ஜி
இந்த நிலையில் இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் தனது வழக்கறிஞர் சனா கான் மூலம் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பிப்பார் என தெரிகிறது.

ஷீனா போரா
தான் கொலை செய்ததாக கூறப்பட்ட ஷீனா போரா உயிருடன் இருப்பதாக இந்திராணி முகர்ஜி தெரிவிக்கிறார். இதுகுறித்து இந்தியா டுடே செய்தியில் கூறியுள்ளதாவது: ஷீனா போரா உயிருடன் இருப்பதாக சிறையில் உள்ள ஒரு பெண் கூறியுள்ளார். அவர் ஷீனாவை காஷ்மீரில் பார்த்ததாகவும் சொல்கிறார்.

ஷீனா போரா உயிருடன் இருக்கிறார்
எனவே சிபிஐ ஷீனா போரா உயிருடன் இருப்பது குறித்து கண்டறிய வேண்டும் என இந்திராணி முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு கடிதமும் எழுதியுள்ளார். எனவே இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. இறந்ததாக கூறப்படும் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக இந்திராணி கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications