Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நொடிக்கு நொடி “டுவிஸ்ட்”.. மகா CM ஏக்நாத் ஷிண்டே ராஜினாமாவா? திடீர் மீட்டிங் ஏன்? அமைச்சர்கள் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு அஜித் பவார் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில் இன்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பதவி விலக உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதுகுறித்து சிவசேனா அமைச்சர்கள் விளக்கமளித்து உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அஜித் பவார் 29 தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுடன் சிவசேனா - பாஜக கூட்டணி ஆதரவு தெரிவித்து உள்ளதால், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகலாம் என்றும் பேச்சு அடிபட்டு வந்தது.

Is Maharashtra CM Eknath Shinde going to resign? lets hear his Shivsena ministers explanation

இந்த நிலையில் இன்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது வர்ஷா பங்களா இல்லத்தில் சிவசேனாவில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். சில மணி நேரங்கள் நீடித்த இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

இதுகுறித்து கூட்டம் முடிந்து வெளியே வந்த மகாராஷ்டிரா அமைச்சர் உதய் சாமத் பேசுகையில், “முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டம் நடைபெற்றது. எதிர்வரும் மழைகால கூட்டத் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டோம். அதேபோல் மகாராஷ்டிரா சட்டப்பேரவைக் கூட்டம் குறித்து ஆலோசனை செய்தோம்.

சிவசேனா எம்.எல்.ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும், இயக்கத்தை வளர்ப்பது குறித்து நாங்கள் அலோசித்தோம். அஜித் பவாரின் வருகையால் எங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் இடையே எந்த அதிருப்தியும் இல்லை.

ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்வார் என்ற தகவல்கள் அனைத்தும் வதந்தி. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையின் கீழ் இருக்கிறோம்.” என்றார். இதேபோல், மகாராஷ்டிரா அமைச்சர் ஷம்புராஜ் தேசாயும் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்வதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது. எங்களுக்கு 200 க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எந்த தலைவரும் அதிருப்தியாக இல்லை. அனைவரும் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையின் கீழ் உள்ளோம்.” என்றார்.

அதேபோல் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவிக்கையில், “எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன. ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக தொடர்வார். அவர் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.” என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+