Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மசூதிகளில் ஒலிபெருக்கியை அகற்றனும்! இல்லாவிட்டால் இதுதான் நடக்கும்! ராஜ்தாக்கரே எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ‛‛மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் மசூதிகளுக்கு வெளியே ஒலிபெருக்கி வைத்து அனுமன் பாடல்கள் அதிக ஒலியில் ஒலிக்கப்படும்'' என மகாராஷ்டிரா நவநிர்மான சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே கூறினார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் மும்பை சிவாஜி பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர நவநிர்மாண சேனாவின்(MNS) தலைவர் ராஜ்தாக்கரே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒலிபெருக்கியை அகற்றுங்கள்

ஒலிபெருக்கியை அகற்றுங்கள்

மசூதிகளில் ஒலிபெருக்கிகள்(Loud Speakers) ஏன் அதிக ஒலியில் ஒலிக்கப்படுகின்றன?. இதை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மசூதிகளுக்கு வெளியே ஒலிபெருக்கி வைக்கப்பட்டு அனுமன் பாடல்கள் அதிக ஒலியில் ஒலிக்கப்படும். நான் பிரார்த்தனை அல்லது குறிப்பிட்ட மதத்துக்கு எதிரானவன் அல்ல. நான் எனது மதத்தால் பெருமைப்படுகிறேன்.

சோதனைக்கு வேண்டுகோள்

சோதனைக்கு வேண்டுகோள்

மசூதிகளில் சோதனை மேற்கொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகிறேன். பாகிஸ்தான் ஆதரவாளர்கள் வசித்து வரும் நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பது போலீசாருக்கு நன்கு தெரியும். எம்எல்ஏக்கள் வாக்கு வங்கிக்காக அமைதி காக்கின்றனர். ஆதார் அட்டை இல்லாதவர்களை கூட ஓட்டளிக்கும் வகையில் எம்எல்ஏக்கள் அடையாள அட்டைகள் வழங்குகின்றனர்.

உத்தவ் தாக்கரே மீது விமர்சனம்

உத்தவ் தாக்கரே மீது விமர்சனம்

2019 தேர்தலின்போது பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிசை முதல்வராக்க பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் முடிவு செய்தனர். தனது ஆதரவின்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்பதை உணர்ந்த உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் வெளியே வந்து முதல்வராகி உள்ளார்.

ஜாதிவெறி அதிகமாகி உள்ளது

ஜாதிவெறி அதிகமாகி உள்ளது

தற்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஜாதிவெறியை அதிகப்படுத்தியுள்ளார். ஜாதி அடிப்படையில் மக்களை பிரித்துள்ளார். சாதி அரசியலில் இருந்து வெளியேறாவிட்டால் நாம் எப்படி இந்துவாக இருப்போம். உத்தரபிரதேசத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நான் பாராட்டுகிறேன். மகாராஷ்டிராவிலும் அதே வளர்ச்சியை நாங்கள் விரும்புகிறோம். விரைவில் அயோத்திக்கு செல்வேன். இந்துத்துவா பற்றியும் பேசுவேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+