மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சுயேட்சைகள் உள்ளிட்ட 29 எம்.எல்.ஏக்கள்
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியவர்களாக சுயேட்சைகள் உள்ளிட்ட சிறுசிறு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் 29 பேர் உருவெடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களில் வென்றது. தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்.எல்.ஏக்களும் 11 சுயேட்சைகளும் ஆதரிப்பதாக கூறி பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ், நவம்பர் 30-க்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். ஆனால் என்சிபியின் 54 எம்.எல்.ஏக்களில் 40க்கும் மேற்பட்டோர் தாங்கள் பாஜகவை ஆதரிக்கவில்லை என கூறியுள்ளனர்.
இதனால் சட்டசபையில் பட்னாவிஸ் அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில் சுயேட்சைகள், சிறு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் 29 பேர் உள்ளனர்.
என்சிபி எம்.எல்.ஏக்களின் ஆதரவு குறையும் நிலையில் இந்த 29 எம்.எல்.ஏக்களின் உதவியுடன் ஆட்சியை பாஜக தக்க வைத்துக் கொள்ளவே முயற்சிக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தற்போது சுயேட்சை எம்.எல்.ஏக்களாக இருப்பவர்களில் சிலர் பாஜக அதிருப்தி வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வென்றவர்கள். ஆகையால் அவர்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்கவே செய்யும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
ஏற்கனவே மஜ்லிஸ் கட்சியானது சிவசேனா-என்சிபி காங்கிரஸ் அரசு அல்லது பாஜக அரசு யாருக்கும் ஆதரவு இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது. அக்கட்சிக்கு 2 எம்.எல்.ஏகள் உள்ளனர். பிரகார் ஜனசக்தி கட்சியின் நிறுவனரான பாச்சு காடு, தாங்கள் சிவசேனாவையே ஆதரிப்போம் என கூறியுள்ளார். அக்கட்சிக்கும் 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!











Click it and Unblock the Notifications