விரைவில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. பாஜக - சிவசேனா இடையே அடுத்த வாரம் தொகுதி பங்கீடு பேச்சு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக - சிவசேனா இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த நிலையில், சிவசேனாவின் கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க கூடாது என பாஜக-விற்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மூத்த சிவசேனா தலைவர் சுபாஷ் தேசாய் மற்றும் பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர், ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளுமே அதிக தொகுதிகளில் போட்டி போட விரும்புகின்றன.
இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்பு இருந்ததை போலவே மகாராஷ்டிராவில் மிகுந்த செல்வாக்குடன் திகழ வேண்டும் என்ற பிடிவாதத்தில் உள்ளது சிவசேனா. இதற்காக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது மொத்தமுள்ள288 தொகுதிகளில், சரிபாதி தொகுதிகளை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது.
அதே சமயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு 18 தொகுதிகளை கொடுத்த பிறகு மீதமுள்ள 270 தொகுதிகளை சரிபாதியாக பிரித்து கொள்வதையே பாஜக விரும்புகிறது . இதுபற்றி கருத்து தெரிவித்த மூத்த பாஜக எம்எல்ஏ ஒருவர், தற்போது மகாராஷ்டிர பேரவையில் பாஜகவின் பலம் 122 ஆக உள்ளது. மேலும் 8 சுயேட்சைகளின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது. அதன்படி பார்த்தால் எங்களுக்கு கூடுதலாக 5 தொகுதிகள் மட்டுமே கிடைக்கிறது.
ஆனால் சிவசேனாவிற்கு 63 எம்எல்ஏ-க்கள் உள்ளதால் 270 தொகுதிகளை சரிபாதியாக பிரித்து கொள்வதால், சிவசேனாவிற்கே லாபம். இதனை அக்கட்சி புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஆனால் சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் மற்ற கூட்டணி கட்சிகள் எல்லாமே பாஜக ஆதரவாளர்களே. எனவே பாஜக தனது ஒதுக்கீட்டில் தான் அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும். எங்களை பொறுத்தவரை மொத்த இடங்களையும் ஆளுக்கு பாதியாக, தலா 144 தொகுதிகளாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் என கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த 2014-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது தொகுதி பங்கீடு பேச்சு தோல்வியடைந்ததால், பாஜக - சிவசேனா இடையே 25 ஆண்டு கால நட்பில் முறிவு ஏற்பட்டது. அப்போது மோடி அலை வீசியதால், மகாராஷ்டிராவில் பாஜக 122 இடங்களிலும், சிவசேனா 63 இடங்களிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications