சட்ட ரீதியாக என்ன வழி இருக்கிறது.. சிவசேனாவை காலி செய்ய பிளான் போடும் பாஜக.. ஆளுநருடன் ஆலோசனை!
மஹாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் இன்று அம்மாநில ஆளுநர் பகத் சிங்கை சந்தித்தனர்.
Recommended Video
மும்பை: மஹாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் இன்று அம்மாநில ஆளுநர் பகத் சிங்கை சந்தித்தனர்.
மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. முதல்வர் பதவி வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக இருக்கிறது. மஹாராஷ்டிராவில் இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது.
சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.

பாஜக தலைவர்
இந்த நிலையில் மஹாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் இன்று அம்மாநில ஆளுநர் பகத் சிங்கை சந்தித்தனர். சுமார் 1 மணி நேரம் இவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். முக்கியமான எம்எல்ஏக்கள் மட்டுமே இந்த ஆலோசனையில் இடம்பெற்று இருந்தனர்.

என்ன ஆலோசனை
இந்த ஆலோசனையில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் இதில் என்ன விவாதம் செய்தார்கள் என்பதை அம்மாநில பாஜக கட்சி ரகசியமாக வைத்து இருக்கிறது. ஆட்சியை பிடிப்பது குறித்து முக்கிய திட்டங்களை இவர்கள் ஆலோசனை செய்தார்கள் என்பது மட்டுமே தெரிய வருகிறது.

சந்திரகாந்த் பாட்டீல்
இது தொடர்பாக சந்திரகாந்த் பாட்டீல் அளித்த பேட்டியில், நாங்கள் முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்தோம். ஆனால் அதுகுறித்து பேச முடியாது. சட்ட ரீதியாக என்ன வழி இருக்கிறது என்பது தொடர்பாக ஆலோசனை செய்தோம். எங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது.

தேர்தல்
அதனால்தான் நாங்கள் தேர்தலில் பெரிய வெற்றியை பதிவு செய்து இருக்கிறோம். அதனால் நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதி. நாங்கள் சட்ட ரீதியாக சில விஷயங்கள் விவாதித்துள்ளோம். விரைவில் ஆட்சி அமைப்போம், மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும், என்று கூறி இருக்கிறார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications