மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று- காங். மூத்த தலைவர் கமல்நாத்
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. இன்றைய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார்; சட்டசபை கலைப்புக்கு பரிந்துரைக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதற்கு சற்று முன்னதாக முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்நாத் கூறுகையில், உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை. உத்தவ் தாக்கரேவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் என்றார். இதையடுத்து அமைச்சரவை கூட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் உத்தவ் தாக்கரே நடத்துவார் எனவும் கூறப்படுகிறது.\
#WATCH | Mumbai: "Maharashtra CM Uddhav Thackeray has tested positive for #COVID19," says Congress Observer for the state, Kamal Nath. pic.twitter.com/wl22yJkXXt
— ANI (@ANI) June 22, 2022
முன்னதாக இன்று காலையில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் கோஷ்யாரி, கொரோனா பாதிப்பால் மும்பை ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications