”இந்தியா” கூட்டணி: இணைவது பற்றி இன்னமும் முடிவெடுக்கலையே.. திடீரென மகாராஷ்டிராவிலிருந்து வந்த குரல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: "இந்தியா" கூட்டணி கூட்டம் இன்று மும்பையில் தொடங்கும் நிலையில் மகாராஷ்டிரா விவசாயிகள் கட்சி திடீரென இன்னமும் அணியில் இணைவது பற்றி முடிவெடுக்கவில்லையே என கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

"இந்தியா" கூட்டணி இன்றும் நாளையும் மும்பையில் ஆலோசனை நடத்துகிறது. இன்று இரவு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தரும் இரவு விருந்துடன் இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது.

Maharashtra farmer party not yet decided on joining I.N.D.I.A

"இந்தியா" கூட்டணியின் பொதுசெயல்திட்டத்தை உருவாக்கும் குழு, ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்புக் குழு, தொகுதி பங்கீடு என பல்வேறு அம்சங்கள் நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. மும்பை ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தம் 28 கட்சிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 26 அரசியல் கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்றன.

இக்கூட்டணியில் மகாராஷ்டிராவின் விவசாயிகள் கட்சியான -SSS இணையும் என கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அக்கட்சியின் தலைவரும் விவசாய சங்கத் தலைவருமான ராஜூ ஷெட்டி, இன்னமும் "இந்தியா" கூட்டணி யில் இணைவதா? இல்லையா என்பது குறித்து முடிவு செய்யவில்லை என்கிறார்.

ராஜூ ஷெட்டியின் கட்சி கடந்த 2017-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தது. பின்னர் காங்கிரஸ்- என்சிபி- சிவசேனாவின் கூட்டணியில் இணைந்தது. தற்போது "இந்தியா" கூட்டணிக்கு வருமா? அல்லது மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்புமா? என்பது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+