மும்பையில் சரத்பவாருடன் 3 காங். தலைவர்கள் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை: என்சிபி நவாப் மாலிக்
மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் (என்சிபி) சரத்பவாரை இன்று மாலை 5 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் சந்தித்து பேசுகின்றனர்; இச்சந்திப்புக்குப் பின்னர் ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என என்சிபி மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

இத்தகவல்கள் வெளியான நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறியதாவது:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் 54 எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். அதில் மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் கட்சித் தலைவர் சரத்பவாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சரத்பவார் தலைமையில் இதற்கான குழுவும் அமைக்கப்படும்.
ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் நேற்று அழைப்பு விடுத்திருந்தார். மேலும் இன்று இரவு 8.30 மணி வரை ஆட்சி அமைக்க அவகாசமும் கொடுத்திருக்கிறார். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் மும்பை வந்து சரத்பவாரை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளனர்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ், என்சிபி, சிவசேனா மூன்றும் இணையாமல் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என நாங்கள் நம்புகிறோம். இந்த மூன்று கட்சிகளும் இணையாமல் போனால் மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு நவாப் மாலிக் கூறினார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி! பலருக்கு தீவிர சிகிச்சை! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications