மகாராஷ்டிராவில் திருப்பம்.. சரத் பவாருடன் பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு..புது கூட்டணியா?
மகாராஷ்டிராவில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் மத்திய பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு நடத்தி உள்ளார்.
மும்பை: மகாராஷ்டிராவில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் மத்திய பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு நடத்தி உள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் பதவி வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறது. பாஜக கூட்டணியில் நாங்கள் இணையும் போதே இந்த ஒப்பந்தத்தை செய்தோம் என்று சிவசேனா கூறி வருகிறது.
மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. அங்கு சிவசேனா முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்டு வருகிறது.

இல்லை
இதனால் போதுமான இடங்களில் வென்றும் கூட பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. இன்னொரு பக்கம் சிவசேனா உடன் கூட்டணி கிடையாது. அது எங்கள் கொள்கைக்கு முரணானது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

என்ன தெரிவித்தார்
நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். மக்கள் அதற்குத்தான் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதை நாங்கள் மதிக்கிறோம், என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால் புதிய திருப்பமாக தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் மத்திய பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு நடத்தி உள்ளார்.

என்ன ஆலோசனை
இந்த சந்திப்பில் மஹாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். சிவசேனா தொடர்ந்து பிடிவாதமாக இருப்பது குறித்து ஆலோசனை செய்துள்ளனர். இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது என்றும் ஆலோசித்துள்ளனர்.

திருப்பம்
இதில் பாஜக தேசியவாத காங்கிரஸ் கூட்டணி குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. சிவசேனா பிரச்சனை செய்வதால், தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க பாஜக முயல்வதாக செய்திகள் வந்தது. இந்த சந்திப்பு அந்த சந்தேகத்தை வலுப்படுத்தியது.

வேண்டாம்
ஆனால் இந்த தகவலை சரத் பவார் மறுத்துள்ளார். அதன்படி, நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை. வைக்க மாட்டோம். சிவசேனாவை சமாதானம் செய்யும்படி அமைச்சர் ராமதாஸ் அத்வாலேவிடம் குறிப்பிட்டேன். நீங்கள்தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன் என்று சரத் பவார் குறிப்பிட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications