ஆபாச படத்தை பார்த்து..உடலை கயிற்றால் கட்டி விபரீத உடலுறவு...கழுத்தில் கயிறு இறுக்கி வாலிபர் சாவு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆபாச படத்தை பார்த்து, உடலை கயிற்றால் கட்டி பெண்ணுடன் விபரீத உடலுறவு மேற்கொண்ட வாலிபர் கழுத்தில் கயிறு இறுக்கி உயிரிழந்தார்.
வாலிபர் இறந்தது தொடர்பாக அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

இது தேவையா?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கபர்கேரா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் வியாழக்கிழமை இரவு 28 வயது வாலிபரும், ஒரு பெண்ணும் அறை எடுத்து தங்கினர். பின்னர் இருவரும் உடலுறவு மேற்கொண்டனர். அப்போது காமம் தலைக்கேறிய நிலையில் உற்சாகத்தை மேலும் அதிகரிப்பதற்காக அந்தப் பெண், வாலிபரின் கைகளையும், கால்களையும் ஒரு நைலான் கயிற்றால் நாற்காலியுடன் சேர்த்து கட்டினார். மேலும் அவரது கழுத்தில் மற்றொரு கயிற்றையும் கட்டி நாற்காலியுடன் சேர்த்து கட்டியுள்ளார்.

உயிரை பறித்தது
ஒரு கட்டத்தில் அந்த பெண் கழிவறைக்கு சென்றபோது, நாற்காலி விலகியதால் வாலிபரின் கழுத்தில் கட்டப்பட்ட கயிறு இறுக்கிக் கொண்டது. ஏற்கனவே கை, கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் நகர முடியாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கழிவறையில் இருந்து வெளியே வந்த பெண் , வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை
இதுபற்றி அவர் லாட்ஜ் ஊழியரிடம் தகவல் தெரிவித்தார். லாட்ஜ் ஊழியர் வந்து நாற்காலியில் கட்டப்பட்ட நபரை கயிற்றில் இருந்து விடுவித்தார். இது பற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சென்று வாலிபரின் உடலை மீட்டு, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

ஆபாச படத்தால் வந்த வினை
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:-இறந்தவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இருவரும் ஒன்றாக நேரம் செலவிட வியாழக்கிழமை இரவு லாட்ஜுக்கு வந்தனர். அதன்பின்பு ஆபாச பட காட்சிகளை பார்த்து இந்த விபரீத உடலுறவில் ஈடுபட்டனர். கடைசியில் அது உயிரை பறித்து விட்டது. இதுபோல் ஆபாச படங்களை பார்த்து விட்டு அதுபோல் யாரும் இதுபோன்ற விபரீதமான செயலில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications