எய்ட்ஸ் நோயாளியை ஏமாற்றி பலாத்காரம் செய்த காமுகன் - மும்பை சியான் மருத்துவமனையில் பயங்கரம்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண் எய்ட்ஸ் நோயாளி என்று தெரிந்தும் பலாத்காரம் செய்துள்ளான் ஒரு காமுகன். மும்பையில் இந்த பதைபதைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மும்பை: எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண் என்று கூறியும் துடிக்க துடிக்க பலாத்காரம் செய்துள்ளான் ஒரு காமுகன். வார்டுபாய் போல நடித்து சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி அந்த பெண்ணை சீரழித்திருக்கிறான்.
மும்பையில் உள்ள லோகமான்ய திலக் முனிசிபல் மருத்துவமனையில் சிறுநீராக கோளாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ஒரு பெண். அவருக்கு உதவி செய்வதற்காக அவரின் சகோதரியும் உடன் இருந்தார். வார்டு பாய் போல இருந்த ஒருவன், அந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தார்.

தான் ஒரு எச்ஐவி நோயாளி என்றும் தானும் சிசிக்சை பெற விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் தான் அழைத்து செல்வதாக கூறி மருத்துவமனையில் மேல்மாடிக்கு அழைத்துச்சென்று சீரழித்து விட்டான்.
எய்ட்ஸ் நோயாளியான தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியும் அவன் விடவில்லை என்று சியான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதுகாப்பு நிறைந்த சியான் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா, செக்யூரிட்டிகளின் பாதுகாப்பையும் மீறி இந்த சம்பவம் நடந்துள்ளது நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த சம்பவம் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் டீன் ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.
பலாத்காரம் செய்தவனை கண்டுபிடித்து கைது செய்த மும்பை காவல்துறையினர் அவனுக்கும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருக்கிறாதா? என்று எச்ஐவி டெஸ்ட் பரிசோதனை செய்துள்ளனர். வீட்டில், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில் தற்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லையே என்பது வேதனை தருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications