தற்கொலைக்கு தூண்டியதாக கணவனையோ மனைவியையோ குற்றம்சாட்ட முடியாது- ஹைகோர்ட் தீர்ப்பு
நாக்பூர்: "திருமண வாழ்க்கையில் கணவன் - மனைவிக்கு இடையே சண்டைகள் வருவது சகஜம். இதைக் காரணம் காட்டி, ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு மற்றொருவர் தான் காரணம் என்று சொல்ல முடியாது" என பம்பாய் உயர் நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு ஆசிரியைக்கும், அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு அவரது கணவர் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார்.

"எனது மகனின் தற்கொலைக்கு அவனது மனைவிதான் காரணம்" என்று கணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் பெண் மீது 'தற்கொலைக்குத் தூண்டியதாக' (Abetment to Suicide) வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடினார்.
சண்டைகள் சகஜம்: குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் ஏற்படுவது இயல்பானது. சண்டையிட்ட காரணத்திற்காகவே ஒருவரை தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளியாகக் கருத முடியாது.
நேரடித் தூண்டுதல் வேண்டும்: தற்கொலைக்குத் தூண்டுதல் என்பது, குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை "நீ போய் சாவு" என்று நேரடியாகத் தூண்டியிருக்க வேண்டும் அல்லது சதி செய்திருக்க வேண்டும். வெறுமனே கோபத்தில் பேசும் வார்த்தைகள் தூண்டுதலாகாது.
தற்கொலைக் கடிதம்: இறந்துபோன கணவர் எழுதிய கடிதத்தில், தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மனைவி தன்னைத் துன்புறுத்தியதாக அவர் எங்கும் சொல்லவில்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
குற்ற நோக்கம் : ஒருவர் தற்கொலை செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு (Criminal Intent) செயல்பட்டிருந்தால் மட்டுமே அது குற்றமாகும். சோர்வு அல்லது மன அழுத்தத்தால் ஒருவர் எடுக்கும் முடிவுக்குத் துணையை முழுப் பொறுப்பாக்க முடியாது.
அந்தப் பெண் தனது கணவரின் தற்கொலைக்கு நேரடியாகக் காரணமாக இருக்கவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, அவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
திருமண உறவில் ஏற்படும் கசப்பான சம்பவங்கள் அல்லது சண்டைகள் ஒருவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாம். ஆனால், அந்த உளைச்சலால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், சட்டப்படி அது தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications