வயிற்றில் இருந்த பொருளின் மதிப்பு மட்டும் ரூ.8.5 கோடி .. மும்பை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி
மும்பை: மும்பை விமான நிலையத்துக்கு கென்யாவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது நிக்லோஸ் என்ற பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரின் பைகளில் சோதனை நடத்தினர். அதில் எதுவும் இல்லை. ஆனால் அவரை ஸ்கேன் செய்த போது 8.5 கோடி மதிப்புள்ள பொருள் வயிற்றில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இந்தியாவின் மிகமுக்கியமான விமான நிலையங்களில் மும்பை விமான நிலையமும் ஒன்று. இந்தியாவில் மிக அதிகவிமானங்கள் வந்து செல்லும் விமானங்களில் ஒன்றாகவும், 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையமாகவும் மும்பை விமான நிலையம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 920 விமானங்கள் வரை வந்து செல்லும் திறன் உடையது மும்பை விமான நிலையம்.

இங்கு ஏராளமான வெளிநாட்டு விமானங்களும், உள்ளூர் விமானங்களும் வந்து செல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருட்கள் மற்றும் பல்வேறு கடத்தல் பொருட்களை கடத்தி வருகிறார்கள். அவர்களை கண்காணிக்க மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துகிறார்கள்.
அந்த வகையில் மும்பை விமான நிலையத்துக்கு கென்யாவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது நிக்லோஸ் என்ற பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில் அவரது நடவடிக்கையில் சந்தேகம் இருந்தது. அதிகாரிகள் அவரின் பைகளில் சோதனை நடத்தினர்.
ஆனால் சந்தேகத்துக்கு இடமாக எந்த பொருளும் பறிமுதல் அவரிடம் கிடைக்கவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அவரை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தனர். அப்போது வயிற்றில் விழுங்கி போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாரிகள் அந்த பயணி வயிற்றில் விழுங்கி கடத்தி வந்த 50 கொகைன் போதைப்பொருள் கேப்சூல்கள் எடுக்கப்பட்டன. அதன் மதிப்பு ரூ.8 கோடியே 65 லட்சம் ஆகும். இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications