அதிகரிக்கும் கேஸ்கள்.. இது டெல்டா அல்ல.. ஓமிக்ரான்?.. மும்பையில் தொடங்கியது கொரோனா 3ஆவது அலை
மும்பை: மும்பையில் கொரோனா 3ஆவது அலை தொடங்கிவிட்டது என மகாராஷ்டிரா டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் எச்சரித்துள்ளார். எனினும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா முதல் அலை, இரண்டாவது அலையில் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருந்தது. அது போல் தற்போது புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் பாதிப்பிலும் இந்த மாநிலம்தான் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து டெல்லி உள்ளது.
இந்த நிலையில் கொரோனா 3ஆவது அலை மும்பையில் தொடங்கிவிட்டதாக கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டாக்டர் ஷாஷங்க் ஜோஷி இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

24 மணி நேரம்
அவர் கூறுகையில் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,500 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக கொரோனா கேஸ்கள் இரட்டிப்பாகி வருகின்றன. அனைத்து கேஸ்களும் லேசாகவே உள்ளன. மருத்துவமனை உள்கட்டமைப்பு அதிகமாக இல்லை. எனவே டெல்டா வேரியண்டிற்கு பதிலாக ஓமிக்ரான் பரவி வருகிறது.

எண்ணிக்கை அதிகம்
இதுதான் உண்மை. பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் எதிர்கொள்ள முடியும் வகையில் இருக்கிறது. இதெல்லாம் ஓமிக்ரானால் அதிகரித்துள்ளது. 80 சதவீதம் பேருக்கு ஜீனோம் இருக்கிறது. எனவே இது டெல்டாவின் தாக்கம் அல்ல. மும்பையில் கொரோனா 3ஆவது அலை தொடங்கிவிட்டது. மருத்துவமனைகளில் மோசமான நிலையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

6 வாரங்களில் அதிகம்
எனவே கவலைப்பட ஒன்றும் இல்லை. பரவல் வேகமாகதான் உள்ளது. ஆனால் சளி, காய்ச்சல் போல்தான் இருக்கிறது. விரைவில் நாள்தோறும் மும்பையில் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவில் 6 வாரங்களில் ஓமிக்ரான் பாதிப்பை ஏற்படுத்தும். இதில் அச்சமடைய ஒன்றும் இல்லை, உங்கள் மருத்துவரை அணுகுங்கள், கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள்.
Recommended Video

ஓமிக்ரான்
டெல்லியிலும் கேஸ்கள் அதிகரித்தாலும் அவை லேசாகவே உள்ளன. இதுதான் ஓமிக்ரான். காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், சோர்வு, முதுகு வலி, தலை வலி உள்ளிட்டவைதான் ஓமிக்ரான் அறிகுறிகளாக உள்ளன. சுவை இழப்பையும் நுகர்வு தன்மையையும் யாரும் இழக்கவில்லை. இதுதான் டெல்டாவுக்கும் ஓமிக்ரானுக்கும் உள்ள வித்தியாசம். தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் பாதிப்பு ஏற்படுகிறது உண்மைதான். ஆனால் இந்த தடுப்பூசிகள் நோய் தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ளும் என்றார். மும்பையில் வரும் ஜனவரி 7ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், கடற்கரைகள், ரிசார்ட், பப்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications