மனைவியின் உடை, சமையல் குறித்து விமர்சிப்பது குற்றமல்ல! ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
மும்பை: மனைவி அணியும் உடை, அவர் செய்யும் சமையல் குறித்து விமர்சிப்பது கிரிமினல் குற்றம் ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான பெண், மீண்டும் திருமணம் செய்த நிலையில் அந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மும்பையைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்து நடந்தது. இதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் 2022 ஆம் ஆண்டு அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. ஆனால் இந்த திருமண வாழ்க்கையும் அந்த பெண்ணுக்கு நிலைக்கவில்லை.

ஒன்றரை மாதங்கள் மட்டுமே இந்த திருமணம் நீடித்தது. கணவரிடம் இருந்து பிரிந்தாலும் அந்த பெண் புகுந்த வீட்டில் தன்னை கண்ணியமாக நடத்தவில்லை என புகார் எழுப்பினார். மேலும் கணவருக்கு இருந்த மனநல பாதிப்பை மறைத்து திருமணம் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
அதனடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதிகள், கணவர் மற்றும் அவரது வீட்டாருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.
அந்த தீர்ப்பில், உறவுகளுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிவினை ஏற்பட்டாலே ஒருவர் மீது ஒருவர் மிகைப்படுத்தி குற்றம்சாட்டுவது இயல்பானதாகி விடுகிறது. திருமணத்திற்கு முன்பே மணமகனுக்கு இருக்கும் நிறை, குறைகள் பற்றி மறைக்காமல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மனம் நலம் பாதிக்கப்பட்டதை மறைத்ததாக பெண் கூறும் புகார் ஏற்கும்படியாக இல்லை.
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 498 ஏ பிரிவின் கீழ் இதை குற்றமாக கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மனைவியின் சமையல், உடுத்தியிருக்கும் உடை பற்றி விமர்சிப்பதையும் குற்றமாக கருதமுடியாது.
ஒரு வேளை அதை குற்றமாக கருதி கணவர், அவருடைய குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்தால் அது சட்ட நடைமுறைக்கு எதிரானது. கணவர், அவரது உறவினர்களால் ஒரு பெண்ணுக்கு கொடுமை இழைக்கப்பட்டால் மட்டுமே இந்திய தண்டனை சட்டம் 498 ஏ பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications