காதலை கண்டித்த அண்ணன் மீது பாலியல் புகார்.. 2 வருட சிறைக்கு பின் உண்மையை சொன்ன தங்கை..!
அண்ணன் மீது பாலியல் புகார் சொன்ன தங்கை அப்புகாரை வாபஸ் வாங்கி உள்ளார்
மும்பை: காதலை கண்டித்த அண்ணன் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்ட நிலையில், 2 ஆண்டு சிறைக்குப்பின் தங்கையே உண்மையை சொல்லியதால், அண்ணன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2019-ல் மும்பையில் ஒரு சம்பவம் நடந்தது.. ஒரு இளைஞரை சிறுமி காதலித்து வந்துள்ளார்.. இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர்..

இந்த காதல் விவகாரம், சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்துள்ளது. அண்ணனுக்கு 24 வயது.. தங்கையின் காதலை அறிந்து அவரை கண்டித்துள்ளார்..
கண்டபடி ஊர் சுற்றக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார்.. ஆனால், அந்த பெண்ணோ, தன்னுடைய அண்ணனே தன்னை பலாத்காரம் செய்ததாக பகீர் குற்றச்சாட்டை கூறினார்.. தன்னுடைய அண்ணன்தான், தன்னை சரமாரி தாக்கியதாகவும், வீட்டில் அப்பா, அம்மா யாருமே இல்லாதபோது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் தெரிவித்தார். இதையடுத்து இளைஞர் மீது எப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டது.
சிறுமி அளித்த புகாரின்பேரில் போலீசாரும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.. இப்போது 2 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. காதலனுடன் வெளியே சென்றதற்காகவே தன்னை அண்ணன் திட்டியதாக உண்மையை முன்வந்து சொல்லி உள்ளார்.. தங்கை வாக்குமூலம் அளித்ததை அடுத்து சிறப்பு நீதிமன்றம் அந்த இளைஞரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்துள்ளது.
அதுமட்டுமல்ல, சம்பவம் நடந்தபோது, 2018-ல் சிறுமி மைனர் என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிய கோர்ட், சிறுமியின் சாட்சியம் முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை கொண்டிருப்பதால் அது நம்பகமானதாக இல்லை என்றும் கூறி, இளைஞரை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.












Click it and Unblock the Notifications