‛லைவில்’ ஆபாச வீடியோ.. சிக்க வைத்த செல்போன் செயலி.. 'தமன்னா' உள்பட 3 பேர் அதிரடி கைது! பரபர தகவல்
மும்பை: மும்பையில் செல்போன் செயலி வழியாக லைவ் மூலம் ஆபாச வீடியோ காண்பித்த தமன்னா உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஆபாச வீடியோ தொடர்பான இணையதளங்களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் சிறுவர், சிறுமிகள் தொடர்பான பார்ன் வீடியோ பார்ப்போர் மற்றும் பகிர்வோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க சில செல்போன் செயலிகள் மூலம் லைவில் ஆபாச வீடியோவை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த புகார் என்பது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அதிகமாக சென்றது.
அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போன் செயலி ஒன்றின் வழியாக லைவில் ஆபாச வீடியோவை சிலர் பார்க்கின்றனர். இதற்காக ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் வெர்சோவா போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து வெர்சோவா போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அப்போது Pihu Official App எனும் செல்போன் செயலியில் ஆபாச வீடியோவை லைவாக காட்டுவது தெரியவந்தது. மேலும் இந்த வீடியோ என்பது வெர்சோவா பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து எடுத்து லைவாக ஒளிபரப்பு செய்வது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் வெர்சோவா போலீசார் அந்த பகுதியில் உள்ள 4 பங்களாக்களில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது செல்போன் செயலி மூலம் லைவில் ஆபாச வீடியோ காண்பித்தது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் தனிஷா ராஜேஷ் கனோஜியா (வயது 20), தமன்னா ஆரிப் கான் (34) மற்றும் ருத்ரா நாராயண் ராவத் (27) என்பது தெரியவந்தது.
இவர்கள் ஆபாச வீடியோ பார்க்க விரும்பும் நபர்களிடம் ரூ.1000 முதல் ரூ.10000 வரை பெற்று கொண்டு அந்த செயலி மூலம் லைவில் ஆபாச வீடியோ காண்பித்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பேர் மீதும் பல பிரிவுகளில் வெர்சோவா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த செயலியின் உரிமையாளர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது .












Click it and Unblock the Notifications