வெறும் 6 மணி நேரம்தான்.. இனி கோவாவிற்கு சல்லென செல்லலாம்.. வருகிறது NH-66.. சூப்பர் அறிவிப்பு
மும்பை: மும்பை-கோவா நெடுஞ்சாலையை (NH-66) நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று பொதுப்பணித் துறை (PWD) தெரிவித்துள்ளது. இதனால் மும்பையில் இருந்து கோவா செல்வது இனி எளிதாகும்.
இந்தியா முழுக்க பல்வேறு நகரங்களுக்கு இடையே பறக்கும் வழி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
சென்னை பெங்களூர் விரைவுச்சாலை திட்டம் ரூ.18 ஆயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
கோவா சாலை: அந்த வகையில் மும்பை-கோவா நெடுஞ்சாலையை (NH-66) நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று பொதுப்பணித் துறை (PWD) தெரிவித்துள்ளது. இதனால் மும்பையில் இருந்து கோவா செல்வது இனி எளிதாகும்.
மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலை பணி தொடர்பாக அவசர நடவடிக்கைகளை எடுக்க பொதுப்பணித்துறை முயற்சித்து வருவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. மும்பை-சிந்துதுர்க் வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த பணிகள் முடிந்ததும் சாலை திறக்கப்படும்.
சாலை திறக்கப்பட்டதும் 18 மணி நேர பயணம் 6 - 8 மணி நேரத்திற்கு என்று கூறப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கோவாவிற்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
முக்கியமான பணிகள்: இன்னொரு பக்கம் சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்.
இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications