லாக்டவுனுக்கு எதிரான பிற மாநில தொழிலாளர் போராட்டம்- மும்பையில் பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னி கைது
மும்பை: கொரோனா தொற்று நோயை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் பிற மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியது தொடர்பாக பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னி கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
லாக்டவுனை மே 3-ந் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் மும்பை பாந்தரா பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம் நடத்தினர்.

இதனால் லாக்டவுன் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட தனிநபர் இடைவெளி என்பது தகர்ந்தது. இதேபோல் குஜராத்தின் சூரத்திலும் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை திருப்பி அனுப்பக் கோரி போராட்டம் நடத்தினர். மும்பையில் போலீசார் தடியடி நடத்தி பிற மாநில தொழிலாளர்களை கலைந்து போகச் செய்தனர்.
மேலும் பிற மாநில தொழிலாளர்களின் போராட்டத்துக்கு காரணமாக இருந்தார் என மும்பையில் பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னி கைது செய்யப்பட்டுள்ளார். லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் செய்தியை ஒளிபரப்பினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் ராகுல் குல்கர்னி பணிபுரியும் நிறுவனமோ, ரயில்வே அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்தான் செய்திகள் ஒளிபரப்பப்பட்டன; பின்னர் மே 3-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது என்கிற செய்தியையும் ஒளிபரப்பினோம் என விளக்கம் அளித்திருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications