முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் நின்ற காரின் உரிமையாளர் மர்ம மரணம்!
மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு அருகே சில வாரத்திற்கு முன்பு வெடிபொருட்களுடன் கார் நின்றது. தற்போது அந்த காரின் உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
முகேஷ் அம்பானி வீடு அருகே கார் நின்றதே இன்னும் மர்மமாக இருக்கும் நிலையில் தற்போது கார் உரிமையாளரும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையின் தெற்கு பகுதியில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே கடந்த பிப் 25-ம் தேதி வெடிகுண்டுகளுடன் நின்றிருந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காரில் சக்தி வாய்ந்த 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது. அந்த காரின் பதிவு எண் குறித்து விசாரித்தபோது தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஹிரென் மன்சுக் என்பவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்ட்டது. கார் திருடு போனதாக போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, முக கவசம் அணிந்து வந்த மர்ம நபர் காரை நிறுத்துவது தெரிந்தது.. ஆனால் அவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. மேலும் மும்பை நகருக்குள் அந்த கார் செல்வதும், அதைத் தொடர்ந்து ஒரு இன்னோவா கார் செல்வதும் சிசிடிவி கேமரா காட்சிகளில் தெரியவந்தது. இந்த நிலையில் அந்த காரின் உரிமையாளர் திடீரென மரணம் அடைந்துள்ளார்.
அவரது உடல் மும்பை அருகே உள்ள ஓடைப்பகுதியில் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைக்கு விபத்து மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி வீடு அருகே கார் நின்றதே இன்னும் மர்மமாக இருக்கும் நிலையில் தற்போது கார் உரிமையாளரும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications