நாக்பூர் வன்முறையாளர்களே! உ.பி. போல புல்டோசர் வரும்.. பகிரங்க மிரட்டல் விடுத்த மகாராஷ்டிரா முதல்வர்!
மும்பை: நாக்பூரில் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுவோர் சொத்துகளை அழிக்க உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாணியில் புல்டோசர்களை களமிறக்குவேன் என்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் அண்மையில் ஷாவா திரைப்படம் வெளியானது. மராத்திய மன்னன் சிவாஜியின் மகன் சம்பாஜியின் வாழ்க்கையை விவரிக்கிறது இந்த திரைப்படம். இப்படத்தில் சம்பாஜியை, முகலாய மன்னர் அவுரங்கசீப் சித்திரவதை செய்து கொலை செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் கொந்தளித்த மராத்தியர்கள், மகாராஷ்டிரா மாநிலம் குல்தாபாத்தில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்ற கோரினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.

நாக்பூரில் நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதனடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே ப்யங்கர மோதல் ஏற்பட்டது; வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நாக்பூர் பற்றி எரிந்த நிலையில் அங்கு 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.
நாக்பூர் வன்முறையில் போலீசார் மீதும் கொடூரமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைகளுக்கு மிக முக்கிய காரணமே ஜனநாயக கட்சித் தலைவர் பகிம்கான் என்கிறது போலீஸ். இதனால் பகீம் கான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே வன்முறையால் பாதிக்கப்பட்ட நாக்பூருக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று சென்றார். இது அவரது சொந்த மாவட்டமாகும். வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பட்னாவீஸ், வன்முறை சம்பவங்களுக்கு காரணம் உளவுத்துறையின் தோல்வி அல்ல. இன்னும் சொல்லப் போனால் உளவுத்துறை சிறப்பாகவே செயல்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டபடி நாக்பூருக்கு வருகை தருவார். அதில் எந்த மாற்றமும் இல்லை.
நாக்பூரில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடம் இருந்தே இழப்பீட்டுத் தொகையும் பெறப்படும். நாக்பூரில் வன்முறையாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலத்தைப் போல புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும்; புல்டோசர்கள் மூலம் வன்முறையாளர்கள் சொத்துகள் நிர்மூலமாக்கப்படும் என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications