Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படத்தால் வந்த பஞ்சாயத்து.. அவுரங்கசீப் கல்லறையை இடிக்க கோரும் இந்துத்வ அமைப்புகள்.. நாக்பூரில் 144.!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமிய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என திடீர் போராட்டம் எழுந்திருக்கும் நிலையில் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ளது. சிறு மோதல் கலவரமான நிலையில், 15 போலீசார் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், தொடர் வன்முறை காரணமாக நாக்பூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒரே ஒரு படத்தால் ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுமா என்றால் ஆம் என பதில் அளித்து இருக்கிறது மகாராஷ்டிரா. மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜியின் வரலாறு சவ்வா என்ற பெயரில் படமாக வெளியாகி இருக்கிறது.

Nagpur Violence vhp Aurangzeb

இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது இது தொடர்பாக விவாதம் எழுந்தது. அப்போது பேசிய சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அபு காஸினி அவுரங்கசீப்பின் நடவடிக்கைகளை பாராட்டியதோடு அவரது புகழ் வாழ்க என முழக்கம் இட்டார்.

இதனால் மார்ச் 20ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்., இந்த நிலையில் முகலாய மன்னர்களிடமிருந்து மகாராஷ்டிராவை மீட்ட சத்திரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியை கொன்ற மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என திடீர் கோரிக்கை எழுந்து இருக்கிறது. மகாராஷ்டிரா மாநில முதல்வரான தேவேந்திர பட்னாவீஸும் அதற்கு ஆதரவாக பேச, விசுவ ஹிந்து பரிஷத்ம் பஜ்ரங் தல் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால் பாபர் மசூதியை போல அவுரங்கசீப் சமாதியை இடித்து அகற்றுவோம் என எச்சரித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்வ அமைப்புகள் சார்பில் மகாராஷ்டிராவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நாக்பூரிலும் சில அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. அப்போது இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்ட நிலையில் அது கலவரமாக மாறியது. பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 போலீசார் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

தொடர்ந்து 17 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் போராட்டத்தில் குதித்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்கத்தில் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உத்தவ் தாக்கரே சிவசேனாவும், ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவும் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜ் தாக்கிராவின் எம்என்எஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையும், காங்கிரஸ் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதும் கவனிக்கத்தக்கது.

தொடர்ந்து அவுரங்கசீப் சமாதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும் நிலையில் கலவரம் மேலும் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்துத்வ அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் வன்முறை வெடித்தது. 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் போராட்டத்தை கட்டுப்படுத்தினர்.

சத்ரபதி சம்பாஜிநகர் குல்தாபாத்தில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி, புனே, கோலாப்பூர், நாசிக், மாலேகான் மற்றும் அஹில்யாநகர் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+