Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்யானுக்கு போதை பொருள் சப்ளை செய்தவர் யார்.. உண்மையை போட்டுடைத்த அனன்யா பாண்டே?

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கானுக்கு போதை பொருளை யார் சப்ளை செய்தார்கள் என்பது குறித்து தனக்கு தெரியும் என போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் நடிகை அனன்யா பாண்டேவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதானி துறைமுகத்திலிருந்து அண்மையில் 3000 கிலோ ஹெராயின் கிடைத்தது. அதன் மதிப்பு ரூ 9000 கோடி ஆகும். அது யாருடையது, யார் இதை கடத்தி வந்தார்கள் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யான் கானும் அவரது நண்பர்களும் கோவாவுக்கு சொந்தமான கப்பலில் ரேவ் பார்ட்டி நடத்தியதாக கூறப்படுகிறது.

போதை பொருள்

போதை பொருள்

அந்த பார்ட்டியில் போதை பொருளை அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஷாரூக் கான் மகன் உள்பட நண்பர்கள் என விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆர்யானின் செல்போனை ஆய்வு செய்ததில் இந்த பார்ட்டிக்கு வருமாறு நடிகை அனன்யா பாண்டேவுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது தெரியவந்தது.

போதை பொருள்

போதை பொருள்

இதையடுத்து அனன்யா பாண்டேவிடம் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் அனன்யா பாண்டேயின் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இவரிடம் கடந்த வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தப்பட்டது.

அனன்யாவிடம் கோபம்

அனன்யாவிடம் கோபம்

அப்போது விசாரணைக்கு தாமதமாக வந்ததால் அனன்யாவிடம் கோபமடைந்த அதிகாரிகள், இது திரைப்பட ஷூட்டிங்கோ இல்லை தயாரிப்பு நிறுவனமோ இல்லை என தெரிவித்தனராம். அவரிடம் ஆர்யானுடன் நடத்திய உரையாடல்கள் குறித்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில் நான் கஞ்சா சப்ளை செய்பவர் இல்லை. கஞ்சாவும் கஞ்சா செடியும் ஒன்று என்பது கூட எனக்கு தெரியாது.

நண்பர்கள் அழைப்பின் பேரில்

நண்பர்கள் அழைப்பின் பேரில்

எனது நண்பர்கள் அழைப்பின் பேரில் ஒன்று அல்லது இரு முறை சிகரெட் பிடித்துள்ளேன் என்றாராம். ஒரு முறை ஆர்யானுக்கும் அனன்யாவுக்கும் இடையே நடந்த உரையாடலில் கஞ்சா சப்ளை செய்பவர்கள் யாரையாவது தெரியுமா என ஆர்யான் கேட்டதற்கு, நான் ஏற்பாடு செய்கிறேன் என அனன்யா சொல்லியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விசாரணையில் ஆர்யானுக்கு போதை பொருள் சப்ளை செய்தவர் யார் என்பது தனக்கு தெரியும் என தெரிவித்துள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+