கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட மும்பை பெண்.. தேசிய மகளிர் ஆணையம் விசாரணை!
மும்பை: மும்பையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
மும்பையின் புறநகர் பகுதியான சகிநாகாவை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், கைரானி சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை டெம்போவில் கடத்திச்சென்றார்.
பின்னர் டெம்போவை நிறுத்திய அந்த கொடூரன் அந்த பெண்ணை மிக கொடூரமாக கற்பழித்துள்ளான். அத்துடன் நின்று விடாமல், காமவெறி அடங்காத அந்த சைக்கோ காமுகன் பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து சிதைத்து விட்டு, கொடூரமாக தாக்கி தப்பி சென்று விட்டான்.

பெண் பரிதாப மரணம்
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றபோது அந்த பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மும்பை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சைக்கோ கைது
இந்த மிக கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்ட மோகன் சவுகான் (45) என்ற சைக்கோ காமுகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவன் மீது பாலியல் பலாத்காரம், கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்தார். ''இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது மனிதநேயத்தை அவமானப்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். விரைவு நீதிமன்றம் விசாரணையை கையாளும்'' என்று அவர் கூறினார்.

தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
இது மிகவும் காட்டுமிராண்டித்தனம் மற்றும் கொடுமை என்று தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும், அதிவேகத்தில் விசாரணை முடித்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுக்க என்று போலீசாருக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

அரசு நாடுகளை போல் தண்டனை
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு இளம்பெண் நிர்பயா, கொடூர கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமாக சித்ரவதை செய்தனர். இந்த கொடூர சம்பவம் இன்னும் நமது மனதில் ஒரு சோக வடுவாக இருக்கிறது. தற்போது நிர்பயா பெயரில் பெண்களுக்கான பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வந்தாலும், பெண்களை சிதைக்கும் இதுபோன்ற சைக்கோக்கள் திருந்துவதாக தெரியவில்லை. அரசு நாடுகளை போல் உடனுக்குடன் கொடூர மரணத்தை மோகன் சவுகான் போன்ற காமுகனுக்கு கொடுத்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை வரும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications