டிசம்பர் முதல், 24 மணி நேரமும் வங்கி கணக்கிலிருந்து ஆன்லைனில் பணம் அனுப்பலாம்.. ஆர்பிஐ அதிரடி
மும்பை: என்ஜிஎப்டி எனப்படும் ஆன்லைன் பணம் செலுத்தும் வசதி வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய நிதிக் கொள்கை இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ரெப்போ ரேட்டை 35 சதவீதம் குறைப்பதான அறிவிப்பு முக்கியமானதாகும். ஆசிய நாடுகளிலேயே, வேறு எந்த மத்திய வங்கியையும்விட குறைவான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.

ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளாக குறைக்க டாக்டர் ரவீந்திர எச்.தோலக்கியா, டாக்டர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா, பிபு பிரசாத் கானுங்கோ மற்றும் சக்தி காந்தா தாஸ் ஆகியோர் வாக்களித்தனர், இரண்டு உறுப்பினர்கள் (டாக்டர் சேதன் காட் மற்றும் டாக்டர் பாமி துவா) ரெப்போ வீதத்தை 25 அடிப்படை புள்ளிகளாக குறைக்க வாக்களித்தனர்.
மந்தமான பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவே, ரிசர்வ் வங்கி இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க துவங்கியுள்ளது. அதில் மற்றொரு அறிவிப்பு என்பது, தேசிய எலக்ட்ரானிக் பண்ட்ஸ் டிரான்ஸ்பர் எனப்படும் என்இஎப்டி பற்றியது.
தற்போது, காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரைதான், NEFT மூலமாக பணத்தை அனுப்ப முடியும். அதற்கு இடைப்பட்ட காலத்தில், பணம் அனுப்ப முடியாது. வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும், NEFT வாயிலாக பணம் அனுப்ப முடியும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.
இதன் மூலம், ரீட்டெயில் வணிகத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என்று ஆர்பிஐ நம்புகிறது. மேலும், ரிசர்வ் வங்கி 2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7% என்ற இலக்கிலிருந்து 6.9% என்ற இலக்கிற்கு குறைத்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications