சும்மா ரப்பர் போல் வளைந்து நெளிந்து ஆடும் தென்னை.. வீட்டில் காட்டாற்று வெள்ளம் போல் பாயும் நீர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் பேய்க்காற்று வீசியதால் தென்னை மரம் ஒன்று ரப்பர் போல் வளைந்து நெளிந்து ஆடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 3 ஆம் தேதி முதல் மும்பை, ராய்காட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.

இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் வைரலாக்கி வரும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் காணலாம்.

வெள்ளத்தில் மூழ்கியது

மும்பைவாசிகள் எத்தனை நாளுக்குத்தான் இதுபோன்ற சூழல்களை சந்திக்க வேண்டியிருக்கு? என்கிறார் இந்த வலைஞர். ஒரு வீட்டில் சமையல் அறையில் ஜன்னல் ஜாலியில் இருந்து அணைக்கு வருவது போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வீடு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பலத்த காற்று

மும்பையில் பலத்த காற்று வீசி வருவதால் ஒரு வீட்டில் வைக்கப்பட்ட தென்னை மரம் பேயாட்டம் ஆடுகிறது. ஏதோ ரப்பர் போல் மாறி மாறி வளைகிறது. சூறாவளி காற்றின் போது கூட இப்படி ஆடுமான்றது டவுட்தான்!

நிலச்சரிவு

மும்பையில் கண்டிவேலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய மலை அப்படியே சரிந்து விழுகிறது.

மண் சாலை

இது ஆறு இல்லை. மும்பையில் உள்ள சவுபட்டி கடற்கரை. வெள்ளநீரால் மூழ்கியுள்ளது. மண் சாலை எது, கடல் எது என தெரியாத அளவுக்கு எல்லாம் ஒன்று போல் காணப்படுகிறது.

ஈடு கொடுக்க முடியாமல்

சாலையில் தேங்கியுள்ள தண்ணீருக்கு ஈடு கொடுக்க முடியாமல் சாய்ந்து விட்ட இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள்.

சூறாவளி

இன்று மும்பையில் பெய்த மழைக்கு நிசர்கா புயல் எல்லாம் தோற்று போனது. அந்தளவுக்கு புயல் கரையை கடந்தால் ஏற்படுவது போன்ற சூறாவளி காற்றும் கனமழையும் பெய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+