சும்மா ரப்பர் போல் வளைந்து நெளிந்து ஆடும் தென்னை.. வீட்டில் காட்டாற்று வெள்ளம் போல் பாயும் நீர்
மும்பை: மும்பையில் பேய்க்காற்று வீசியதால் தென்னை மரம் ஒன்று ரப்பர் போல் வளைந்து நெளிந்து ஆடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 3 ஆம் தேதி முதல் மும்பை, ராய்காட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.
இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் வைரலாக்கி வரும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் காணலாம்.
6 சாட்டிலைட்கள் அவசரமாக வேண்டும்.. சீனாவிற்கு எதிராக இந்தியா வகுக்கும் வியூகம்.. நெருங்க முடியாது!
|
வெள்ளத்தில் மூழ்கியது
மும்பைவாசிகள் எத்தனை நாளுக்குத்தான் இதுபோன்ற சூழல்களை சந்திக்க வேண்டியிருக்கு? என்கிறார் இந்த வலைஞர். ஒரு வீட்டில் சமையல் அறையில் ஜன்னல் ஜாலியில் இருந்து அணைக்கு வருவது போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வீடு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
|
பலத்த காற்று
மும்பையில் பலத்த காற்று வீசி வருவதால் ஒரு வீட்டில் வைக்கப்பட்ட தென்னை மரம் பேயாட்டம் ஆடுகிறது. ஏதோ ரப்பர் போல் மாறி மாறி வளைகிறது. சூறாவளி காற்றின் போது கூட இப்படி ஆடுமான்றது டவுட்தான்!
|
நிலச்சரிவு
மும்பையில் கண்டிவேலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய மலை அப்படியே சரிந்து விழுகிறது.
|
மண் சாலை
இது ஆறு இல்லை. மும்பையில் உள்ள சவுபட்டி கடற்கரை. வெள்ளநீரால் மூழ்கியுள்ளது. மண் சாலை எது, கடல் எது என தெரியாத அளவுக்கு எல்லாம் ஒன்று போல் காணப்படுகிறது.
|
ஈடு கொடுக்க முடியாமல்
சாலையில் தேங்கியுள்ள தண்ணீருக்கு ஈடு கொடுக்க முடியாமல் சாய்ந்து விட்ட இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள்.
|
சூறாவளி
இன்று மும்பையில் பெய்த மழைக்கு நிசர்கா புயல் எல்லாம் தோற்று போனது. அந்தளவுக்கு புயல் கரையை கடந்தால் ஏற்படுவது போன்ற சூறாவளி காற்றும் கனமழையும் பெய்தது.