பெரும் அலறல் சத்தம்.. கவனமாக இருங்க.. நிசார்கா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது என்ன?
மும்பை: நிசார்கா புயல் காரணமாக மும்பைவாசிகள் மிக பெரிய சத்தத்தை இன்று கேட்க போகிறார்கள் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டு இருக்கிறார்.
Recommended Video
அரபிக் கடலில் உருவாகி தற்போது வேகமாக நகர்ந்து வரும் நிசார்கா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் இந்த புயலால் கடுமையாக பாதிக்கும். இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா கடல் பகுதியிலிருந்து 120 கி.மீ. தொலைவில் நிசார்கா புயலின் கண் உள்ளது. இந்த புயலால் மும்பையில் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்கும்.
தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட்
தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில், மகாராஷ்டிராவில் இருக்கும் அலிபாக் கடலில் தெற்கு பகுதியில் இந்த புயல் கரையை கடக்கும். காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் இந்த புயல் கரையை கடக்கும். மொத்தம் 2-3 மணி நேரம் இந்த கரையை கடக்கும் செயல் நடைபெறும். புயல் கரையை கடக்கும் போது அதன் வேகம் 90-100 கிமீ/ நேரம் என்ற அளவில் இருக்கும்.

வேகம்
காற்றின் வேகம் 110-120 கிமீ/ நேரம் வரை செல்ல வாய்ப்பு உள்ளது.இந்த புயல் மும்பைக்கு அருகே 1.30 மணிக்கு வரும். அப்போது மும்பையில் 70-80 கிமீ/ நேரம் வேகத்தில் செல்லும். காற்றின் வேகம் 100 கிமீ/நேரமாக இருக்கும். மும்பைக்கு அருகே இன்று மதியம் புயல் கண் பகுதி இருக்கும். இதனால் அங்கு அதிக வேகமாக காற்று வீசும். ஆனால் இந்த நிசார்கா புயல் 1948ல் மும்பையை தாக்கிய புயலை போல இருக்காது.

மும்பை எப்படி
1948 புயல் காரணமாக அலிபாக் பகுதியில் 160கிமீ/ நேரம் அளவுக்கு காற்று வீச்சு இருந்தது.ஜூஹூ பகுதியில் 151 கிமீ/ நேரம் அளவிற்கு காற்று வீச்சு இருந்தது. இந்த புயல் காரணமாக பெரிய அளவில் சத்தம் வரும். மும்பை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இந்த சத்தம் வரும். 1940க்கு பின் பிறந்த மக்கள் முதல் முறையாக இப்படி ஒரு சத்தத்தை கேட்பார்கள். அதனால் கவனமாக இருங்கள், என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பெரும் சத்தம்
1948ல் மும்பையை பெரிய புயல் தாக்கியது. அதன்பின் அந்த அளவிற்கு புயல் இல்லை. தற்போது வந்திருக்கும் நிசார்கா அந்த வேகத்தில் இருக்காது. ஆனால் இந்த புயல் நகரத்தின் பெரும் பகுதியை தாக்குவதால் சேதம் அதிகமாக இருக்கும். புயல் காரணமாக மும்பையில் அதிக அளவில் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications