க்ளைமேக்ஸ் கட்டத்தில் மகாராஷ்டிரா அரசியல்.. சிவ சேனா தலைவரை சந்திக்கிறார் கட்கரி
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பெரும் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை இன்று சந்தித்து பேச உள்ளார்.
மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனா ஆகியவற்றுக்கு நடுவே அதிகாரத்தை பங்கு பிரித்துக் கொள்வதில் உரசல் ஏற்பட்டதால் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை, நிதின் கட்கரி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அயோத்தி தீர்ப்பு வெளியாகும் முன்பாக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வேண்டியது அவசியம் என்று அப்போது மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இன்று, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நிதின் கட்கரி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதில் வல்லவர் என்று அறியப்படுபவர் நிதின் கட்கரி. எனவே அவர் வந்தால் பிரச்சினை சுமூகமாக தீர்ந்து விடும் என்ற எண்ணம் சிவசேனா வட்டாரத்திலும் இருக்கிறது.
எனவே உத்தவ் தாக்கரே உடன் இன்று அவர் நடத்தக்கூடிய பேச்சுவார்த்தை என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நிதின் கட்கரி இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு இழுபறி நிலையை சரி செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மகாராஷ்டிர அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலை நீடித்து வருகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின. 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. முதல்வர் பதவி தங்களுக்கு, தேவை என்று சிவ சேனா வலியுறுத்துவதால், பாஜக சிவசேனா கூட்டணி தலைவர்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. எனவே அரசு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications