பால்கரில் 2 சாமியார்கள் அடித்து கொலை- மதபிரச்சனை எதுவுமே இல்லை: மகா. முதல்வர் உத்தவ் தாக்கரே
மும்பை: பால்கரில் 2 சாமியார்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதம் சார்ந்த பிரச்சனை எதுவும் இல்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் பால்கரில் சில நாட்களுக்கு முன்னர் 2 சாமியார்களும் அவர்களை அழைத்துச் சென்ற ஓட்டுநர் ஒருவரும் பொதுமக்களால் அடித்தே கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பால்கர் பகுதியில் குழந்தை திருடர்கள் சுற்றுவதாகவும் மனிதர்களை கடத்தி உடல் உறுப்புகளை திருடுவதாகவும் ஒரு வதந்தி பரவியது. இந்த வதந்தியின் அடிப்படையில்தான் 2 சாமியார்களையும் சந்தேகத்துடன் பொதுமக்கள் மடக்கி தாக்கி உள்ளனர். இதில்தான் சாமியார்களும் ஓட்டுநரும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர்களிடம், இதில் மத பிரச்சனை எதுவும் இல்லை. குஜராத்தின் சூரத்துக்கு செல்ல முயன்ற போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த கும்பல் படுகொலை சம்பவம் தொடர்பாக 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர்தான் முதன்மை குற்றவாளிகள் என்றும் அவர்களின் தூண்டுதலிலேயே இப்படுகொலை நிகழ்ந்ததாகவும் மகாராஷ்டிரா போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications