முதல்வர் பதவியில் 50: 50.. அமித்ஷாவுக்கு கடைசி நேரத்தில் நெருக்கடி தரும் சிவசேனா!
Recommended Video
மும்பை: புதிய அரசு அமைய வேண்டுமெனில் மகாராஷ்டிரத்தில் முதல்வர் பதவியை பாஜகவும் சிவசேனாவும் சரி சமமாக பிரித்துக் கொள்வது என அமித்ஷா எழுதிக் கொடுக்க வேண்டும் என அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவுடன் மாநில கட்சியான சிவசேனா கூட்டணி வைத்தது. இதில் பாஜக 122 இடங்களிலும் சிவசேனா 63 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது. எனினும் கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவும் சிவசேனையும் எலியும் பூனையுமாகவே இருந்தன. இதனால் இந்த முறை கூட்டணி அமையாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி வைத்தனர்.

17 இடங்கள் பறி போனது
இந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனை 56 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த இரு தேர்தல்களிலும் பாஜக கடந்த முறையை காட்டிலும் 17 இடங்களை கோட்டை விட்டுள்ளது.

ஆட்சி அமைக்க
அது போல் சிவசேனை கட்சியும் 7 இடங்களை பறி கொடுத்துவிட்டது. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. இதனால் பாஜக மாநில கட்சியின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே
இதை நன்கு உணர்ந்த சிவசேனா, தேர்தல் முடிவுகள் வந்து இரு தினங்களுக்கு பிறகு பாஜகவின் கழுத்தை அறுக்கும் செயலில் சிவசேனா ஈடுபட்டுள்ளது. ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனை கட்சி எம்எல்ஏக்களும் உத்தவ் தாக்கரேவும் இன்று ஆலோசனை நடத்தினர்.

கட்சி ஆட்சி செய்ய
அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சிவசேனா கட்சி எம்எல்ஏ பிரதாப் சர்நாயக் கூறுகையில் மகாராஷ்டிரத்தில் ஆட்சியை இரு கட்சிகளும் சரிசமமாக பிரித்து கொள்ள வேண்டும். அதாவது பாஜக இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்தால் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் எங்கள் கட்சி ஆட்சி செய்ய வேண்டும்.

இதுதான் நேரம்
முதல்வர் பதவியை இரு கட்சிகளும் சரிசமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும். இதை ஏற்று அமித்ஷாவோ தேவேந்திர பட்நவீஸோ கையெழுத்து போட்டு கொடுத்தால் மட்டுமே புதிய ஆட்சி அமையும். தேர்தலுக்கு முன்பு பாஜக ஒப்புக் கொண்டபடி நடந்து கொள்ள வேண்டிய நேரமிது.

வேறு முடிவுகள்
ஆதித்ய தாக்கரேவை அடுத்த முதல்வராக்க நாங்கள் விரும்புகிறோம். எனினும் இதுகுறித்து உத்தவ் தாக்கரேதான் இறுதி முடிவை எடுப்பார். ஒரு வேளை பாஜக எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் வேறு முடிவுகளை எடுப்போம் என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications