மும்பையில் பிச்சை எடுத்தே பல கோடி சேர்த்த நபர்.. கான்வென்டில் படிக்கும் பிள்ளைகள்.. ஆடம்பர பிளாட் வேற
மும்பை: மகாராஷ்டிராவில் பிச்சைக்காரர் ஒருவருக்கு பல கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாம். மும்பையில் மிகவும் ஆடம்பரமான பிளாட் ஒன்றில் வசித்து வரும் இவரது சொத்து மதிப்பு மட்டும் இல்லை தினசரி வருமானமே பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
பிச்சை எடுத்து பெரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டதாக சில சினிமாக்களில் நகைச்சுவை காட்சியாக காட்டப்பட்டு இருக்கும். விவேக்கிடம் கூட பிச்சைகாரராக நடித்து இருக்கும்... தனக்கு பல வங்கிகளில் அக்கவுண்ட்கள் இருப்பதாக கூறுவார். நாள் முழுக்க வேலை செய்தாலும் நம்மிடம் கூட இவ்வளவு பணம் இல்லையே.. ஆனால் பிச்சை எடுத்தால் இவ்வளவு பணம் கிடைக்கிறதா? என விவேக் கலாய்க்கும் வகையில் அந்தகாட்சி அமைந்து இருக்கும்.

இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் சினிமாவில் மட்டும் இல்லை நிஜத்திலும் நடக்கிறது என்பதை அவ்வப்போது வெளியாகும் சில செய்திகள் காட்டுவதாக இருக்கும். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சி.எஸ்.எம்.டி ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த ஒருவர் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். அது மட்டும் இல்லை.. மும்பையில் அவருக்கு சொந்தமாக ரூ.1.2 கோடி மதிப்புள்ள பிளாட் ஒன்றும் உள்ளதாம்.
மும்பையில் சொந்தமாக விலையுர்ந்த வீடுகள்: தானேயில் இரண்டு கடைகளை வாடகைக்கும் விட்டுள்ளாராம். என்னது இப்பவே தலைசுற்றும் வகையில் இருக்கிறதா... இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம். நாட்டின் நிதி தலைநகரான மும்பை எங்கு பார்த்தாலும் பரபரப்பாகத்தான் காண முடியும். அதிலும் ரயில், பேருந்து நிலையங்களை பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம். பரபரப்பான நேரங்களில் மும்பையில் உள்ள பிரதான ரயில் நிலையங்களில் திரும்பும் திசை எல்லாம் பயணிகள் கூட்டமாகத்தான் இருக்கும்.
இந்த கூட்டத்திற்கு மத்தியிலும் பலரும் பிச்சை எடுப்பதை பார்க்க முடியும். ரயில் நிலையங்களில் வரிசையாக பிச்சைக்காரர்கள் அமர்ந்து இருப்பார்கள். இவர்களை தாண்டித்தான் செல்வது போல இருக்கும். இந்த வரிசையில் நின்று பிச்சை எடுத்தே ஒருவர் பல கோடிக்கு அதிபதியாகி இருக்கிறார் . அந்த பிச்சை எடுக்கும் நபர் பரத் ஜெயின் என அடையாளம் காணப்பட்டது. பொருளாதார ரீதியாக மும்பையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
பரத் ஜெயின் மும்பையில் விலையுர்ந்த வீடுகள் சொந்தமாக்கி வைத்து உள்ளார். இவரது சொத்து மதிப்பு தோராயமாக ரூ.7 கோடியே 50 லட்சம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் 10 மணி முதல் 12 மணி நேரம் பிச்சை எடுத்து ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறாராம். இவரது குழந்தைகள் கான்வென்ட் பள்ளியில் படித்து வருகிறார்கள். அது மட்டும் இன்றி மும்பையில் இரண்டு பிஎச்.கே பிளாட் வீடும் வைத்து இருக்கிறார்.
நெட்டிசன்கள் ஆச்சர்யம்: இதன் மதிப்பு மட்டும் 1.20 கோடி. தானேயில் இரண்டு கடைகளை வாடகைக்கு விட்டுள்ளாராம். அதிலும் அவருக்கு 30 ஆயிரம் ரூபாய் மாத வருமானமாக கிடைத்து வருகிறது. இவ்வளவு வசதி வாய்ப்புகள் பெற்றாலும் இன்னமும் பிச்சை எடுத்தே வருகிறாராம். இந்த கோடீஸ்வர பிச்சைக்காரரான பரத் ஜெயின் பற்றிய செய்திகள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நாள் முழுக்க ஓய்வு இல்லாமல் உழைத்தால் கூட சில நூறுகளே சம்பாதித்து கஷ்டப்படும் எத்தனையோ நபர்களை காண முடிகிறது. ஆனால், ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் இருந்த இடத்தில் இருந்து பிச்சை மட்டுமே எடுத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து கோடிகளில் புரளும் இந்த பிச்சைக்காரர் செய்தியை கேட்டு நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கே உரித்தான பாணியில் கிண்டலும் கேலியுமாக பதிவிட்டு வருகிறார்கள்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications