மும்பையில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Recommended Video
மும்பை: மும்பையில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மகாராஷ்டிரத்தில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த சில நாட்களாக மழை ஓய்வு எடுத்து வந்தது.
இந்த நிலையில் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை விட்டு விட்டு மழை பெய்தது. இதையடுத்து மாலை நேரத்தில் மழை பின்னி பெடலெடுத்துவிட்டது.

மின்சார ரயில்கள்
நேற்று மாலை 5 மணி முதல் மும்பை நகரம் முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. கனமழையின் காரணமாக மாலை நேரத்தில் மின்சார ரயில்களும் தாமதமாகின.

மழை
பணி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மும்பை, தானே, நவிமும்பை பகுதியில் பலத்த மழை பெய்தது.

மிக மிக கனமழை
இந்நிலையில் இன்றும் சனிக்கிழமை மும்பையில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய 3 மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை
இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது தானே மாவட்டத்திலும் , பால்கர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications