‛‛வாரிசு அரசியலை ஒழிக்கனும்’’.. இளைஞர்களே இதை செய்யுங்க! மோடி கூறிய பாயிண்ட்.. திரும்பும் கட்சிகள்
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வாரிசு அரசியலுக்கு எதிராக பேசி வருகிறார். இந்நிலையில் தான் வாரிசு அரசியலை நீர்த்துப்போக செய்ய இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி முக்கிய விஷயத்தை கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் மிகப்பெரிய நீளமான கடல் மேம்பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் கடல் மேல் கட்டப்பட்டுள்ள 22 கிலோமீட்டர் தூர பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். முன்னதாக பிரதமர் மோடி நாசிக்கில் 27 வது தேசிய இளைஞர் விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும் வாரிசு அரசியலை இளைஞர்கள் நீர்த்துப்போக செய்ய வேண்டும் என கூறினார். மேலும் அதற்கான ஐடியாவையும் பிரதமர் மோடி கூறினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா என்பது ஜனநாயகத்தின் தாய். இதை உலகம் அறிந்து வைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கை நமக்கு தெளிவாக தெரிகறிது. இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். ஜனநாயகத்தின் ஒருபகுதியாக இளைஞர்கள் உள்ளதால் நாட்டின் எதிர்காலம் என்பது வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நாட்டை திறம்பட கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும். அதோடு வாரிசு அரசியலை நீர்த்துப்போக செய்ய வேண்டும். வாரிசு, குடும்ப அரசியல் என்பது நாட்டுக்கு கேடானது. இதனை நீர்த்துப்போக செய்யும்படி இளைஞர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். இளைஞர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் இளைஞர்கள் தங்கள் அரசியல் பார்வையை வெளிப்படுத்தினால் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
ஜனநாயக நடைமுறையில் இளைஞர்களின் பங்களிப்பு நாட்டின் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும். முதல் முறை வாக்காளர்கள் இந்திய ஜனநாயகத்திற்கு புதிய சக்தி, ஆற்றலை கொண்டு வருகின்றனர். இன்றைய இந்தியா என்பது இளைஞர் மனநிலையில் உள்ளது. நாட்டில் இளைஞர்கள் பின்தங்காமல் முன்னணியில் உள்ளனர். தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.
இந்திய வரலாற்றில் உங்களை மிகவம் அதிர்ஷ்டசாலியான தலைமுறையாக நான் கருதுகிறேன். ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை வழங்கி உள்ளோம். பல்வேறு தடைகளை அகற்றியுள்ளோம். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் நாட்டின் இளைஞர்களுக்கு பெரிதும் பயனளித்து வருகிறது
இளம் தலைமுறையினர் தங்களது சிறகை விரித்து பறக்க வேண்டிய நேரம் இது. சவால்களை சந்தித்து வெற்றி கொள்ள வேண்டிய காலம் இது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் இலக்குகளை பட்டியலிட்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற வேண்டும். உற்பத்தியின் மையமாக இந்தியா இருக்க முயற்சிக்க வேண்டும்'' என பேசினார்.
மேலும் மகாத்மா ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரி புலே, பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், படுகேஷ்வர் தத், மேஜர் தியான் சந்த், எம் விஸ்வேஸ்வரய்யா உள்ளிட்டோர் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக் உள்பட பலர் பங்கேற்றனர்.
-
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்!











Click it and Unblock the Notifications