நபிகள் அவதூறு: மாஜி பாஜக நுபுர் சர்மாவுக்கு நான் சப்போர்ட்... புதிய பஞ்சாயத்தை கூட்டும் ராஜ் தாக்கரே
மும்பை: இஸ்லாமியர்களின் இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்த அவதூறு விவகாரத்தில் பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை தாம் ஆதரிப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே கூறியிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
டிவி விவாதம் ஒன்றில் நபிகள் நாயகம் தொடர்பாக நுபுர் சர்மா அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையானது. இன்று வரை இந்த பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.

நுபுர் சர்மாவின் விமர்சனத்துக்காக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மத்திய அரசு மன்னிப்பு கேட்கவும் அந்த நாடுகள் வலியுறுத்தின. இதனையடுத்து பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாட்டின் பல பகுதிகளில் நுபுர் சர்மா கருத்தால் வன்முறைகள் வெடித்தன. ராஜஸ்தானில் நுபுர் சர்மாவை ஆதரித்த டைலர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் நாடு கொந்தளிப்படைந்தது. நுபுர் சர்மா தொடர்பாக உச்சநீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நுபுர் சர்மாவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கடந்த வாரம் உ.பி.யில் தீவிரவாதி ஒருவர் பிடிபட்டார். அதேநேரத்தில் ரஷ்யாவில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவில் தற்கொலை தாக்குதல் நடத்த பதுங்கி இருந்த ஐஎஸ் பயங்கரவாதி சிக்கினார்.
இந்நிலையில்தான் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே, தாம் நுபுர் சர்மாவை ஆதரிக்கிறேன் என அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக ராஜ் தாக்கரே கூறியதாவது: நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். நுபுர் சர்மாவின் கருத்து புதியதும் அல்ல. ஜாகிர் நாயக் ஏற்கனவே கூறியதைத்தான் நுபுர் சர்மா கூறினார். ஆனால் ஜாகிர் நாயக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று யாருமே கூறவில்லையே ஏன்? ஓவைசி கூட இந்து கடவுள்களை இழிவுபடுத்திதான் பேசி வருகிறார்.
பால்தாக்கரே உயிருடன் இருந்த போது சிவசேனாவில் நான் இருந்த காலத்தில் எந்த கட்சி அதிக எம்.எல்.ஏக்களை வைத்திருக்கிறதோ அந்த கட்சிதான் முதல்வர் பதவியை பெற முடியும் என்கிற நிலைப்பாட்டை வைத்திருந்தோம். இந்த நிலைப்பாட்டை ஏன் மாற்றிக் கொண்டார் உத்தவ் தாக்கரே? மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தின் போது, தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் முடிவு செய்தனர். அப்போது உத்தவ் தாக்கரே எதிர்க்காதது ஏன்?. இவ்வாறு ராஜ்தாக்கரே கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications