ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர்.. ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கால் சிக்கல்
மும்பை: ‛‛மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் அமைப்பு தான் சுட்டு கொன்றது'' என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 2014ல் பேசினார். இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் பிரமுகர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மகாராஷ்டிரா பிவாண்டி நீதிமன்றத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராகி உள்ளார்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் ராகுல் காந்தி. இவர் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் மரணம் பற்றி பேசினார். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பை அவர் விமர்சனம் செய்திருந்தார்.
ராகுல் மீது அவதூறு வழக்கு
இதுதொடர்பாக ராகுல் காந்தி, ‛‛மகாத்மாக காந்தியை ஆர்எஸ்எஸ் அமைப்பு தான் சுட்டு கொன்றது. ஆனால் இப்போது தேர்தலுக்காக காந்தியின் பெயரை பயன்படுத்துகின்றனர்'' என்று குற்றம்சாட்டியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகியான ராஜேஷ் குண்டே என்பவர் பிவாண்டி செசன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
வழக்கின் பின்னணி
மகாத்மா காந்தியின் படுகொலைக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பு இல்லை. ஆனால் ராகுல் காந்தி தொடர்புப்படுத்தி பேசி ஆர்எஸ்எஸ் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பார்க்கிறார் என்று கூறியிருந்தார். இந்த அவதூறு வழக்கு பிவாண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ராகுல் காந்தி ஆஜர்
இந்த வழக்கில் ராகுல் காந்தியின் ஜாமீனுக்கு முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் பாண்ட் வழங்கியிருந்தார். ஆனால் தற்போது அவர் மரணடைந்துவிட்டார். இதனால் சிவராஜ் பட்டீலுக்கு பதில் புதிய பாண்ட் வழங்க வேண்டும். இதற்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
பலத்த பாதுகாப்பு
இதற்காக ராகுல் காந்தி இன்று டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மும்பை வந்தார். அதன்பிறகு அவர் காரில் நீதிமன்றம் வந்தார். ராகுல் காந்தியின் வருகையையொட்டி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு உள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருந்து சாலை மார்க்கமாக மும்பை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து மாலை 4 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications