எனது கணவர் ஆபாச படங்களை எடுக்கவில்லை.. அவர் எடுத்தது.... ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்!
மும்பை: தனது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை எடுக்கவில்லை என்றும் அவர் எடுத்தது இச்சைகளை தூண்டும் வகையிலான படங்கள்தான் என்றும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தொழிலதிபர் ராஜ்குந்த்ரா. இவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரு குழந்தைகள். இவர் சினிமா வாய்ப்பு தேடும் பெண்களை வைத்து ஆபாச படங்களை எடுப்பதாக புகார்கள் எழுந்தன.
கடந்த பிப்ரவரி மாதம் மும்பை கிரைம் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜ்குந்த்ரா நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

ஆடிஷன்
வாய்ப்பு தேடும் பெண்களை குறி வைத்து அவர்களை ஆடிஷன் என்ற பெயரில் நிர்வாணமாக படம் எடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து நேற்று முன் தினம் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை கிரைம் பிரிவினர் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

காம இச்சை
இதில் ஷில்பா கூறுகையில் எனது கணவர் ஆபாச படங்களை எடுக்கவில்லை. அவர் எடுத்தது காம இச்சையை தூண்டும் படங்களே. ஆபாச படங்களுக்கும் காமத்தை தூண்டும் படங்களும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஹாட்ஷாட் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

ஆபாசங்கள்
அந்த செயலி மூலம் நான் எந்த லாபத்தையும் ஈட்டவில்லை. ஓடிடி தளம், வெப் சீரிஸ்களிலும் கூட இயல்பாகவே ஆபாசங்கள் நிறைந்துள்ளன என ஷில்பா தெரிவித்துள்ளார். செயலிகள் மூலம் தொழிலிலிருந்து ராஜ் குந்த்ரா ஒதுங்கியிருந்தாலும் அவர் வாட்ஸ் ஆப் குரூப்கள் மூலம் தொழிலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

வாக்குமூலம்
ஷில்பாவின் வாக்குமூலத்தை வைத்து குற்றவியல் பிரிவினர் சரிபார்ப்பர். இதை வைத்து விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. ஆபாச படங்களை எடுத்ததில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பிருப்பதாக போதிய ஆதாரங்கள் உள்ளதாக போலீஸார் கூறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications