ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற்றுவிட்டு ரூ.1000 நோட்டுகள் கொண்டுவர திட்டமா? ஆர்பிஐ விளக்கம்
மும்பை: 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுவிட்டு புதிய 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வரும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பணவீக்கத்திற்கு ஏற்ப, அதாவது விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரெப்போ வட்டி விகிதம் (வங்கிகளுக்கு வழங்கப்படும் பணத்திற்கான வட்டி விகிதம்) ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படும். அதன்படி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆர்பிஐ அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறவோ அல்லது ரூ.1,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தவோ யோசிக்கவே இல்லை. தயவு செய்து இது போன்று யூகங்களை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அதிக மதிப்புள்ள கரன்சியை திரும்பப் பெறுவதாக அறிவித்ததில் இருந்து, புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளில் சுமார் 50% மீண்டும் வங்கி முறைக்கு வந்துள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் கூட்டத்ல் தெரிவித்தார்.
கடந்த மாதம் திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 கரன்சி நோட்டுகளில் பெரும்பாலானவை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கி முறைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். மார்ச் 31, 2023 நிலவரப்படி, ரூ.3.62 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
"இதுவரை, திரும்ப பெறுகிறோம் என்ற அறிவிப்புக்குப் பிறகு ரூ. 1.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 நோட்டுகள் திரும்பி வந்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளில் 85% வங்கிக் கணக்குகளில் டெபாசிட்களாக வருகின்றன, இது எதிர்பார்ப்புக்கு ஏற்ப உள்ளது என்றார்.
கடந்த மே 19 அன்று, ரிசர்வ் வங்கி அ 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது . அத்துடன் மே 23 முதல் அத்தகைய நோட்டுகளை (ஒரே நேரத்தில் ரூ. 20,000 வரை ரொக்கமாக) மாற்ற அனுமதித்தது. வங்கியில் டெபாசிட் செய்யவும், ரொக்கமாக மாற்றவும் செப்டம்பர் 30, 2023 வரை ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்துள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications