ரிசர்வ் வங்கி விதிமுறையால் சிக்கல்.. 95% மொபைல் வாலட்கள் முடங்கும் அபாயம்! உங்கள் பணம் ஜாக்கிரதை
Recommended Video

மும்பை: ரிசர்வ் வங்கி அளித்த காலக்கெடு அடுத்த மாதம் இறுதியில் முடிவடைய உள்ள நிலையில், பல்வேறு மொபைல் வாலட்கள் இயங்காமல் போகும் சூழ்நிலை உள்ளது.
டிஜிட்டல்மயம், பணபரிவர்த்தனை போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன மொபைல் வாலட்கள். தள்ளுபடிகள் பலவும் வழங்குவதன் காரணமாக இவற்றின் மீது வாடிக்கையாளர்களுக்கு தனி ஆர்வம் உள்ளது.
சாதாரண தள்ளுவண்டி கடைகளில் கூட , இப்போது மொபைல் வாலட் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.

விண்ணப்பம்
இந்த நிலையில்தான், 'உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC)' என்ற விண்ணப்பத்தை வாடிக்கையாளர்களிடம் கொடுத்து அவர்கள் குறித்த விவரங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதிமுறை வகுத்தது. பிப்ரவரி இறுதியுடன், இந்த விதிமுறை நிறைவடைய உள்ள நிலையில் பல்வேறு மொபைல் வாலட்களும், இன்னும் வாடிக்கையாளரிடம் அவர்கள் குறித்த தகவல்களை பெறவில்லை.

பேடிஎம் பிரச்சினையில்லை
அதேநேரம் பிரபலமாக உள்ள பேடிஎம் வாலட் ஏறத்தாழ 70% வாடிக்கையாளர்களிடம் கேஒய்சி எனப்படும் விவரத்தை சேகரித்து வைத்துள்ளதால் அதன் சேவை முடங்காது என்று கூறப்படுகிறது.

மார்ச் மாதம்
ஆனால், புதிதாக வந்த பல வாலட் நிறுவனங்களுக்கும் சிக்கல் உள்ளதால், 95 சதவீத வாலட்கள், மார்ச் 1ம் தேதி முதல் செயல்படாமல் போக வாய்ப்பு உள்ளது.

உங்கள் பணம் உஷார்
மொபைல் வாலட்டில் மிச்சம், மீதி பணம் அதிக அளவுக்கு இருந்தால் இப்போதிருந்தே அவற்றை செலவிட ஆரம்பிப்பது நல்லது. முடக்கம் அமலுக்கு வந்தால் அந்த பணத்தை செலவிட முடியாது என்பதே இதற்கு காரணம். ரிசர்வ் வங்கி விதிமுறையை அவை பூர்த்தி செய்துள்ளது உறுதியானதும், ரீசார்ஜ் செய்துகொண்டால் நல்லது என கூறுகிறார்கள், வணிக போக்கின் கவனிப்பார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications