Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரெட் அலர்ட்".. மிரட்டும் பேய் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தத்தளிப்பில் மும்பை

மும்பையில் கனமழைக்கு 30 பேர் பலியாகி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக நகருக்கு அடுத்த 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை.. வரலாறு காணாத வெள்ளத்தில் மிதக்கும் Goa

    வட மாநி­லங்­களில் பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்து வரு­கிறது. மகா­ராஷ்­டிரா, டெல்லி, இமாச்சலப் பிர­தே­ச மாநி­லங்­களில் அண்­மையில் சில தினங்­க­ளாக பலத்த மழை நீடிக்­கிறது.

    இதில் கடந்த சில தினங்களாகவே மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது... இதனால் மும்பை நகரமே நீரில் தத்தளித்து கிடக்கிறது.. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் உள்ளது... இதனால் ரயில் உட்பட அனைத்து போக்குவரத்துகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

     நிலச்சரிவு

    நிலச்சரிவு

    பெரும்பாலான தண்டவாளங்கள் மூழ்கியதால் நீண்ட தூர ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுவிட்டன.. மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது... வீடுகள், சுற்றுசுவர்கள் இடிந்து விழுந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.. உயிரிந்தவர்களின் குடும்பத்துக்கு, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    நிவாரணம்

    நிவாரணம்

    இதுபோல், விக்ரோலி, செம்பூர் பகுதியில் நடந்த விபத்துக்களில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.. மும்பையில் பெய்த மழை காரணமாக பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாநகராட்சி நிர்வாகமும் எச்சரித்துள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிப்பு

    பாதிப்பு

    இந்நிலையில், மும்பையில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்­திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மும்பைக்கு கனமழைக்கான 'சிகப்பு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.. மேலும், பலத்த மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள மும்பை மாநகராட்சி, நிர்வாகம் முழுவீச்சில் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

     எச்சரிக்கை

    எச்சரிக்கை

    அதேபோல, தலைநகர் டெல்லியிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், உள்ளிட்ட வடமாநிலங்களில் மேலும் சில தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+