"ரெட் அலர்ட்".. மிரட்டும் பேய் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தத்தளிப்பில் மும்பை
மும்பையில் கனமழைக்கு 30 பேர் பலியாகி உள்ளனர்
மும்பை: அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக நகருக்கு அடுத்த 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் அண்மையில் சில தினங்களாக பலத்த மழை நீடிக்கிறது.
இதில் கடந்த சில தினங்களாகவே மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது... இதனால் மும்பை நகரமே நீரில் தத்தளித்து கிடக்கிறது.. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் உள்ளது... இதனால் ரயில் உட்பட அனைத்து போக்குவரத்துகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவு
பெரும்பாலான தண்டவாளங்கள் மூழ்கியதால் நீண்ட தூர ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுவிட்டன.. மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது... வீடுகள், சுற்றுசுவர்கள் இடிந்து விழுந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.. உயிரிந்தவர்களின் குடும்பத்துக்கு, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

நிவாரணம்
இதுபோல், விக்ரோலி, செம்பூர் பகுதியில் நடந்த விபத்துக்களில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.. மும்பையில் பெய்த மழை காரணமாக பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாநகராட்சி நிர்வாகமும் எச்சரித்துள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு
இந்நிலையில், மும்பையில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மும்பைக்கு கனமழைக்கான 'சிகப்பு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.. மேலும், பலத்த மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள மும்பை மாநகராட்சி, நிர்வாகம் முழுவீச்சில் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

எச்சரிக்கை
அதேபோல, தலைநகர் டெல்லியிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், உள்ளிட்ட வடமாநிலங்களில் மேலும் சில தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications