இன்றும் நாளையும் மும்பைக்கு ரெட் அலர்ட் வார்னிங்.. மிக அதிக கனமழை பெய்யும்.. வானிலை மையம்
Recommended Video
மும்பை: இன்றும் நாளையும் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தற்போது மகாராஷ்டிரம், அஸ்ஸாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. நேற்று முன் தினம் மாலை முதல் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால் காணும் இடங்கள் எல்லாம் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

உள்ளூர் ரயில் சேவை
பாத்லாபூர், தாணே, நவி மும்பை ஆகிய பகுதிகளில் 24 மணி நேரத்தில் 219 மி.மீ. மழை பெய்துள்ளது. மும்பையில் கனமழை பெய்துள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்கள் தண்ணீர் தேங்கியுள்ளதால் உள்ளூர் ரயில் சேவை வழக்கம் போல் இயங்கி வருகிறது.

9 விமானங்கள் மாற்று பாதை
வானிலையில் தெளிவற்றத்தன்மை இருப்பதால் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, 9 விமானங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 200 மி.மீ.ருக்கு மேல் மழை பெய்துள்ளது. அதில் சாந்தாக்ரூஸ்- 219, அந்தேரி- 201, பாத்லாபூர் 447, விக்ரோலி -215, நேருல்- 240, முர்பாத் 332 ஆகிய இடங்களில் மழையானது மி.மீ. அளவில் பதிவாகியுள்ளது.

ரெட் அலர்ட் வார்னிங்
தானே, ராய்காட், பால்கர், மும்பை ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபபட்டுள்ளது. அது போல் கொங்கன், கோவா, குஜராத் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும்.

கடற்கரைக்கு செல்ல வேண்டாம்
மகாராஷ்டிரா, கிழக்கு ராஜஸ்தானில் மிக அதிக கனமழை பெய்யும். காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications