ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம்.. சர்ச்சையை கிளப்பிய சிவசேனா எம்எல்ஏ-வின் பின்னணி
மும்பை: காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு சன்மானமாக ரூ.11 லட்சம் வழங்குவேன் என்று மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சி எம்எல்ஏ பேசியுள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா எம் எல் ஏவின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. சிவசேனா கூட்டணியில் பாஜக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆளும் சிவசேனா கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் சஞ்செய் கெய்க்வாட். இவரது பேச்சுத்தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சஞ்ச்செய் கெய்க்வாட், 'அமெரிக்கா சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இங்குள்ள இட ஒதுக்கீடு முறையை முடிக்க விரும்புவதாக கூறினார். ராகுலின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியின் உண்மை முகத்தை காட்டியுள்ளது. இட ஒதுக்கீடு குறித்து பேசிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு சன்மானமாக ரூ.11 லட்சம் வழங்குவேன் என்றார்.
இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சஞ்செய் கெய்க்வாட்டின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும் கிளம்பியுள்ளன. சிவசேனா எம் எல் ஏ சஞ்செய் கெய்க்வாட் கருத்தை ஏற்கவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவன் குலே கூறுகையில், "சஞ்செய் கெய்க்வாட்டின் கருத்துக்களை நாங்கள் ஆதரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ இல்லை.
வேற லெவலில் மாறுது.. சென்னை மெரினா நீச்சல் குளம்! மாநகராட்சியின் சூப்பர் முடிவு.. இனி பிரச்சினை இல்லை
அதேவேளையில் நமது நாட்டின் முதல் பிரதமர் நேரு, இட ஒதுக்கீடு முன்னேற்றத்தை பாதிக்கும் எனக் கூறி அதற்கு எதிராக இருந்ததை மறக்க முடியாது. அதேபோல இட ஒதுக்கீடு கொடுப்பது முட்டாள்களை ஆதரிப்பது போன்றது என்றார். தற்போது ராகுல் காந்தி இட ஒதுக்கீட்டை ஒழிப்பேன் என்கிறார். நேரு, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி பேசிய கருத்துக்களை ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும்" என்றார்.
யார் இந்த சஞ்செய் கெய்க்வாட்?: மகாராஷ்டிரத்தின் புல்தானா தொகுதி எம்எல்ஏவான சஞ்செய் கெய்க்வாட் இப்படி சர்ச்சையாக பேசுவது புதிது கிடையாது. கடந்த மாதம் கூட இவரது காரை போலீஸ் அதிகாரி ஒருவர் கழுவும் வீடியோ வைரல் ஆனது. இது தொடர்பாக விளக்கம் அளித்த சஞ்செய் கெய்க்வாட், போலீஸ் அதிகாரி வாந்தி எடுத்ததால் காரை கழுவுவதாக கூறினார்.
தாலி கட்டும் நேரத்தில்.. காதலன் செய்த காரியம்.. ஆடிப்போன பெண் வீட்டார்! திருத்தணியே ஆடிப்போச்சு
கடந்த 1987 ஆம் ஆண்டு புலியை வேட்டையாடி அதன் பல்லை எடுத்து தனது கழுத்தில் மாட்டியிருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவரது இந்த வீடியோவே அவருக்கு வினையாக மாறியது. வனத்துறையினர் அவரது கழுத்தில் கிடந்த பல்லை ஆய்வுக்கு அனுப்பி அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் சஞ்செய் கெய்க்வாட், தற்போது ராகுல் காந்தி குறித்து கண்டிக்கதக்க வகையில் பேசியிருக்கிறார். சஞ்செய் கெய்க்வாட்டின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications