ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம்.. சர்ச்சையை கிளப்பிய சிவசேனா எம்எல்ஏ-வின் பின்னணி
மும்பை: காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு சன்மானமாக ரூ.11 லட்சம் வழங்குவேன் என்று மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சி எம்எல்ஏ பேசியுள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா எம் எல் ஏவின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. சிவசேனா கூட்டணியில் பாஜக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆளும் சிவசேனா கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் சஞ்செய் கெய்க்வாட். இவரது பேச்சுத்தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சஞ்ச்செய் கெய்க்வாட், 'அமெரிக்கா சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இங்குள்ள இட ஒதுக்கீடு முறையை முடிக்க விரும்புவதாக கூறினார். ராகுலின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியின் உண்மை முகத்தை காட்டியுள்ளது. இட ஒதுக்கீடு குறித்து பேசிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு சன்மானமாக ரூ.11 லட்சம் வழங்குவேன் என்றார்.
இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சஞ்செய் கெய்க்வாட்டின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும் கிளம்பியுள்ளன. சிவசேனா எம் எல் ஏ சஞ்செய் கெய்க்வாட் கருத்தை ஏற்கவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவன் குலே கூறுகையில், "சஞ்செய் கெய்க்வாட்டின் கருத்துக்களை நாங்கள் ஆதரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ இல்லை.
வேற லெவலில் மாறுது.. சென்னை மெரினா நீச்சல் குளம்! மாநகராட்சியின் சூப்பர் முடிவு.. இனி பிரச்சினை இல்லை
அதேவேளையில் நமது நாட்டின் முதல் பிரதமர் நேரு, இட ஒதுக்கீடு முன்னேற்றத்தை பாதிக்கும் எனக் கூறி அதற்கு எதிராக இருந்ததை மறக்க முடியாது. அதேபோல இட ஒதுக்கீடு கொடுப்பது முட்டாள்களை ஆதரிப்பது போன்றது என்றார். தற்போது ராகுல் காந்தி இட ஒதுக்கீட்டை ஒழிப்பேன் என்கிறார். நேரு, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி பேசிய கருத்துக்களை ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும்" என்றார்.
யார் இந்த சஞ்செய் கெய்க்வாட்?: மகாராஷ்டிரத்தின் புல்தானா தொகுதி எம்எல்ஏவான சஞ்செய் கெய்க்வாட் இப்படி சர்ச்சையாக பேசுவது புதிது கிடையாது. கடந்த மாதம் கூட இவரது காரை போலீஸ் அதிகாரி ஒருவர் கழுவும் வீடியோ வைரல் ஆனது. இது தொடர்பாக விளக்கம் அளித்த சஞ்செய் கெய்க்வாட், போலீஸ் அதிகாரி வாந்தி எடுத்ததால் காரை கழுவுவதாக கூறினார்.
தாலி கட்டும் நேரத்தில்.. காதலன் செய்த காரியம்.. ஆடிப்போன பெண் வீட்டார்! திருத்தணியே ஆடிப்போச்சு
கடந்த 1987 ஆம் ஆண்டு புலியை வேட்டையாடி அதன் பல்லை எடுத்து தனது கழுத்தில் மாட்டியிருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவரது இந்த வீடியோவே அவருக்கு வினையாக மாறியது. வனத்துறையினர் அவரது கழுத்தில் கிடந்த பல்லை ஆய்வுக்கு அனுப்பி அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் சஞ்செய் கெய்க்வாட், தற்போது ராகுல் காந்தி குறித்து கண்டிக்கதக்க வகையில் பேசியிருக்கிறார். சஞ்செய் கெய்க்வாட்டின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications