ராஜஸ்தான் கெலாட் அரசை கவிழ்க்க மும்பையில் திரட்டப்பட்ட ரூ500 கோடி- காங். அதிர்ச்சி தகவல்
மும்பை: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொழிலதிபர்கள் மூலம் ரூ500 கோடி நிதி திரட்டப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தானில் கெலாட் அரசை கவிழ்க்க துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் முயற்சித்தார். ஆனால் அவரது திட்டம் நிறைவேறவில்லை.
இப்போது கெலாட் அரசாங்கம், பைலட் அண்ட் கோவிற்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை, ஆட்சி கவிழ்ப்பு சதி என அடுத்தடுத்து அஸ்திரங்களை ஏவி வருகிறது. இதனிடையே மகாராஷ்டிரா காங்கிரஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு- ரூ12 கோடி ரொக்கம் பறிமுதல்
Recommended Video
இது தொடர்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சச்சின் சாவத் கூறுகையில், கெலாட் அரசை கவிழ்ப்பதற்காக மும்பையில் ரூ500 கோடி பணம் திரட்டப்பட்டது. இங்கு தொழிலதிபர்கள் மூலம் இந்த தொகை திரட்டப்பட்டது.
இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.