2 வாரம் ஆச்சு.. இன்னும் தூங்க முடியாமல் தவிக்கும் சல்மான் கான்.. பாபா சித்திக் படுகொலையால் ஷாக்
மும்பை: மகாராஷ்டிர என்சிபி தலைவர் பாபா சித்திக் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். சல்மான் கானுக்கு உதவியதாலேயே அவர் கொல்லப்பட்டதாக பிஷ்னோய் கும்பல் தெரிவித்தது. இந்த படுகொலையால் சல்மான் கான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரவு தூங்க முடியாமல் சிரமப்படுவதாகவும் பாபா சித்திக் மகன் ஜீஷன் சித்திக் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு என்சிபி தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். நாடு முழுக்க இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த படுகொலை நடந்து சுமார் 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால், இன்னுமே அவரது மகன் ஜீஷன் சித்திக் உட்பட அவரது குடும்பத்தினரால் அந்தச் சம்பவத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. இந்த படுகொலையால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான்.
நட்பு: பாபா சித்திக் மற்றும் சல்மான் கான் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. பல நேரங்களில் சல்மான் கானுக்கு பாபா சித்திக் உதவி இருக்கிறார். அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டது சல்மான் கானை மன ரீதியாகக் கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாகப் பிரபல கேங்ஸ்டார் லாரன்ஸ் பிஷ்னோய் கேங் இந்த கொலைக்குப் பொறுப்பேற்றுள்ளது.. மேலும், சல்மான் கான் உடனான தொடர்பு காரணமாகவே பாபா சித்திக்கை கொன்றதாகவும் சல்மானுக்கு உதவும் அனைவருக்கும் இதே கதி தான் என்றும் எச்சரித்தது. இது சல்மான் கானுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாபா சித்திக் மகன்: இதற்கிடையே பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக் தனது தந்தையின் கொலை சல்மானை எந்தளவுக்கு ஆழமாகப் பாதித்துள்ளது என்பது குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாகப் பிரபல இந்தி ஊடகத்திடம் பேசிய அவர், "இந்த சம்பவத்தால் சல்மான் கான் மிகுந்த சோகத்தில் இருக்கிறார். எனது தந்தையும் சல்மான் கானும் சகோதரர்களைப் போல நெருக்கமாக இருந்தனர்.
தூங்க முடியாமல் சல்மான் அவதி: அப்பாவின் மறைவுக்குப் பிறகு, சல்மான் தன்னால் முடிந்த ஆதரவை எங்களுக்கு அளித்தார். எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்பதை எப்போதும் உறுதி செய்து கொள்வார். மேலும், தன்னால் இரவு நேரங்களில் தூங்க முடிவதில்லை என்றும் சொல்வார். சல்மான் கான் எப்போதும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். வரும் காலங்களிலும் அது தொடரும் என்றும் எங்களுக்குத் தெரியும்" என்றார்.
என்ன காரணம்: சல்மான் கான் கடந்த 1998ல் பாலிவுட் படம் ஒன்றின் ஷூட்டிற்காக ராஜஸ்தான் சென்றிருந்தார். அங்கு அவர் ஒரு வகை கலைமானை (blackbucks) வேட்டையாடியதாகப் புகார் எழுந்தன. இதற்காக சல்மான் கான் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த கலைமானை பிஷ்னோய் சமூகத்தினர் தெய்வமாக வழிபடுவார்கள். எனவே, தங்கள் குல தெய்வ கோயிலுக்கு நேரில் வந்து சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் கேங் மிரட்டியுள்ளது. இல்லை என்றால் சல்மான் கானுக்கும் இதே கதி தான் என்று மிரட்டல் விடுத்து வருகிறது.
முன்னதாக சல்மான் கானை குறிவைத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டையும் இந்த கேங் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிர அரசு அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ஒய்-பிளஸ் அந்தஸ்துக்கு உயர்த்தியது. ஒய்- பிளஸ் பிரிவின் கீழ் 2 முதல் 4 கமாண்டோக்கள் மற்றும் போலீசார் உட்பட 11 பேர் 24 * 7 பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications