விரைவில் சர்தார் பட்டேல் சிலையை விட உயரமான சிலை வருகிறது.. அதுவும் இந்தியாவில்தான்
மும்பை: குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் 182 மீட்டர் உயரம் கொண்டது என்பதால் இப்போதைய நிலையில் உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஆனால், அந்த சாதனையை, மற்றொரு சிலை விரைவில் முறியடிக்க உள்ளது. அதுவும் கூட இந்தியாவில்தான் சாதனை நிகழ்த்தப்பட உள்ளது. சிலை அரசியலுக்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இப்போது அது புது 'உச்சத்தை' தொட ஆரம்பித்துள்ளது.

இதில் மற்றொரு ஒற்றுமை என்னவென்றால், இதுபோல அதிக செலவில் சிலை அமைக்கும் கலாச்சாரத்தை உருவாக்கி வருவது பாஜகதான். குஜராத்தைபோலவே, புதிதாக அதிக உயரத்தில் சிலை அமைக்கும் மாநிலமும் பாஜக ஆளும் மாநிலம்தான்.
ஆம், அந்த மாநிலம் மகாராஷ்டிரா. அமைய உள்ள சிலை, சத்ரபதி சிவாஜிக்கானது. சிலையின் உயரம் 210 மீட்டர். முதலில் 192 மீட்டர் உயரம் கொண்டதாக வடிவமைக்கவிருந்த இந்த சிலை, இப்போது 210 மீட்டர்களாக உயர்த்தபட முடிவு செய்துள்ளது. இந்த சிலைக்கான செலவு ரூ.4,000 கோடி.
மும்பை கடற்கரையில் இந்த சிலை அமைகிறது. எனவே நமது 'சாதனையை' நாமே முறியடிக்கப்போகிறோம். பொருளாதார வளர்ச்சியில் இல்லை.. சிலைகளின் வளர்ச்சியில்.












Click it and Unblock the Notifications