பங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே!
Recommended Video
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமையான இன்று இறங்குமுகத்தோடு முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண், சென்செக்ஸ் 642.22 புள்ளிகளை இழந்து 36,481.09ல் முடிவடைந்தது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 185.90 புள்ளிகள் சரிந்து 10,817.60 என்ற அளவில் முடிவடைந்தது.
உலகளாவிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி மற்றும் ரூபாய் பலவீனமடைந்து வருவதால் இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள அரம்கோ எண்ணெய் ஆலைகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலையை அது பாதித்துள்ளது, மேலும் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் மீதும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை தொடர் சரிவை சந்தித்தது.

டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஆக்சிஸ் வங்கி ஆகியவை சென்செக்ஸில் மிகப்பெரிய இழப்புக்களை சந்தித்தன, இவற்றின் பங்குகள் 6% வரை விலை குறைந்தன. எச்.யூ.எல், ஏஷியன் பெயிண்ட்ஸ் மற்றும் இன்போசிஸ் மட்டுமே ஓரளவுக்கு ஆதாயம் பெற்றன.
துறைரீதியிலாக பார்த்தால், ஏறத்தாழ அனைத்து துறைகளும் இறங்குமுகமாகத்தான் இருந்துள்ளன. வங்கிகள், ஆட்டோ மொபைல், மின்சாரம், இன்ஃப்ரா, மெட்டல், எஃப்எம்சிஜி, ஐடி மற்றும் பார்மா ஆகியவை இதில் அடங்கும்.
இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்திலேயே பங்குச் சந்தை இறங்குமுகத்தில்தான் இருந்தது. சென்செக்ஸ் 112.62 புள்ளிகள் அல்லது 0.30 சதவீதம் குறைந்து 37,010.69 க்கு துவங்கியது. நிஃப்டி 32.30 புள்ளிகள் அல்லது 0.29 சதவீதம் சரிந்தது.
இப்போதே இப்படி என்றால் கச்சா எண்ணை விலை உயர ஆரம்பிக்கும்போது நிலைமை இன்னும் மோசமாகலாம் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications