Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிரா: ஷிண்டே முதல்வர் பதவி தப்புமா? தகுதி நீக்க விவகாரம்- நாளை தீர்ப்பு அளிக்கும் சபாநாயகர்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட சிவசேனாவின் 53 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகர் ராகுல் நார்வேகர் நாளை தீர்ப்பு அளிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து உத்தவ் தாக்கரேவை முதல்வராக கொண்ட கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி அரசு இரண்டரை ஆண்டுகள் தொடர்ந்தது. இந்த நிலையில் சிவசேனா கட்சி 2 ஆக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவின் 40க்கும் அதிகமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் கை கோர்த்தனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். மகாராஷ்டிராவில் பாஜக- ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சி அமைந்தது.

Shiv Sena MLAs disqualification case: Maharashtra Speaker to give verdict tomorrow

சிவசேனா யாருக்கு சொந்தமானது என்ற வழக்கில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சாதகமான முடிவை தந்தது தேர்தல் ஆணையம். அதற்கு முன்னதாக ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரியது உத்தவ் தாக்கரே அணி. அதேபோல உத்தவ் தாக்கரே அணியின் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஷிண்டே தரப்பும் கோரிக்கை விடுத்தது. மொத்தம் 53 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சிக்கி இருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் சபாநாயகர் ராகுல் நார்வேகர் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றமும் சபாநாயகருக்கு கடுமையாக பல முறை எச்சரிக்கை விடுத்து இறுதி முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் கெடு நாளை புதன்கிழமையுடன் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே உட்பட 53 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை நாளை அறிவிக்கிறார் சபாநாயகர் ராகுல் நார்வேகர். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா? உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா? அப்படி ஏக்நாத் ஷிண்டே தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அஜித் பவார், முதல்வராவாரா? அல்லது ஷிண்டே எம்.எல்.சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகவே நீடிப்பாரா? என்கிற பரபர திருப்பங்களை எதிர்நோக்கி இருக்கிறது மகாராஷ்டிரா மாநில அரசியல்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+